யாழ்ப்பாண இடம்பெயர்வு

கவிஞர் ஜெயசீலனின் பிரியாவிடைக் காவியம் நெடுங்கவிதை ஆற்றுகை. அளிக்கை செய்வோர் பரதன் , பார்த்தீபன் ,வேந்தன் , தேவானந்த் 1995 ஒக்ரோபர் யாழ்ப்பா இடம்பெயர்வைப் பேசும் கவிதை நன்றி -நிகழ்Tv
Posted in Video | Comments Off on யாழ்ப்பாண இடம்பெயர்வு

வருவார்கள்…அவனும் வருவான்!

“எனக்குத்தான் எல்லாமும் தெரியும்
பிறர்பற்றி
எனக்கென்ன?
அவர்க்கு என்ன தெரியும்” என்ற
அலட்சியமும்,
அபரிமித ஆற்றல் பலம் திறனும்,
வலிமையும்,
“மற்றவர்கள் மடையர்
அவர்களெல்லாம்
வலிமை வளமற்றோர்” எனும் நினைப்பும்,
அகங்காரம்
மமதையும், பிறரை மதியாத் தலைக்கனமும்,
“எமனுமென் கீழெ”ன்ற இழக்காரமும், “என்னால்
எதுஞ்செய்ய முடியும்…
எதும் என்னால் இயலும்”…எனும்
அதிகார ஆணவமும்,
மாயத் திறனால் மற்றவரை மருட்டுகிற
போலிப் பெருமையும்,
தனது புகழ்காக்க
எந்த நிலைக்கும் இறங்கிப் பழிவாங்கும்
சிந்தனையும்,
அதனைச் செயலாக்கும் தந்திரமும்,
மந்தைகளாய் மற்றவரை எண்ணி
அவர்கருத்தை
மறைத்துத்… திறணை மறுதலித்து…
தற்பெருமைப்
பறையடித்து
“தனைமட்டும் பார்போற்ற வேணும்” என்று
முரசறையும் பண்பும்,
“மூச்சுக் காட்டாதீர்” என
எவரையும் அடக்க எழும் குரலும்,
சுற்றியுள்ள
எவர்க்கும் இரங்கா இரும்புளமும்,
எளியவர்கள்
எவர்க்கும் தயைகாட்டா எகத்தாளமும்,
“தன்சொல்
மட்டும்தான் கேட்டேற்க வேணு”மெனும் கொள்கையும்,
கெட்ட நரிக்குணமும், கீழ்மனமும், வஞ்சகமும்,
வெற்றிக்காய் சுற்றத்தை வீழ்த்தும்
அக வெறியும்,
மற்றவரின் துன்பம் வலி பற்றிக் கவலையற்று
இன்பம் தன் இலாபம் இடம் பொருள் பதவி காக்க
என்னவும் பண்ணத் தயங்கா இயல்புகளும்,
கொண்டிருந்தால்…
அன்னவரும் குவலயத்தில் ‘சூரர்’ தான்!

வென்றிடலாம் அவர்கள்;
விதவிதமாய் வாகைசூடி
எண்திசையை ஆண்டிடலாம்;
கொன்றிடலாம் மெய்யை;
“தாம் வைத்ததே சட்டம்”
என்று திமிரோ டெழுந்தாட்டம்
போட்டிடலாம்;
அன்னவரின் கொட்டம் அடக்க,
அவர் ‘மும்மலத்தில்’
மின்னல் இடியாய் விழுந்து
பொசுக்கிவிட,
வேலோடு ஒருகடவுள் விளைந்து… எழுந்துவந்து…
தீவினைகள் தீய்க்கத் திருப்பெரு வடிவெடுத்துக்…
கருவறுப்பான்;
நொந்தவரின் கதறலுக்குச் செவிகொடுத்துக்
கருணைகூர்வான்; காத்தருள்வான்;
கைவிடான்;
‘சுரர்’ வாழ்வு
பெருகவிடான்;
தர்மம் பிழைக்கவிடான்;
என்பதுதான்….
வரலாறு!
நேற்றும் இன்றும் அட நாளைக்கும்
வருவார்கள் சூரர்கள்;
வேல்சுழற்றி முருகனுந்தான்
வருவான்; ‘நேர்ந்தவரின்’ வலியறுத்துக்
காத்து வரம்
தருவான்; இதுநடக்கும் தப்பாது…
நீ தேறு!

Posted in கவிதைகள் | Comments Off on வருவார்கள்…அவனும் வருவான்!

கம்பனாம் காலக் கவி

அழகான பாக்கள் அதிலே கனாக்கள்
அடி ஆழமுள்ள உனதாற்றில்…
விளையாட எண்ணி விழிகள் பிதுங்கி
மிதவா தமிழ்ந்தேன் நினதேட்டில்.
களமாடல், காதல், கடல் தாண்டி மோதல்,
கருவாய் மிளிர்ந்த கவிமேட்டில்
பழமாக…வாசம்…பசிமீட்டி..வாட்ட
பலியானேன்; கம்பா…உனதூற்றில்!

கவிதா விலாசக் கலை சாகரத்தின்
கரையே… விரிந்த தொடுவானே!
புவியாழு மாறு.. புனிதங் கலந்து
புது ஏடடித்த புகழோனே!
குவிவான கொற்றம் குறளூடு கோர்த்து
குலம் மீட்க வந்த குறியீடே!
செவியூ டறங்கள் சிதையாமல் ராமன்
செயலா லுணர்த்தும் ‘திரு’…நீயே!

வெடியுண்டு லைந்து,விதிமுள்ளு தைத்து
விசமேறும் ‘மார்க்க’ விழி காத்தாய்.
கடிவாள மிட்ட கவியாலே காற்றும்
கடன் வாங்குமாறு கதை வார்த்தாய்.
நொடிபோல் விருத்தம்; நுழைந்தால் விருட்சம்;
நுணுகப் ‘பிறப்பின்’ நுனி நூர்த்தாய்.
அடி, சீர், அசைக்குள்…அணுவைப் பிளக்கும்
அதிசக்தி வைத்தாய் அறந் தைத்தாய்!

உலகே வியந்தும் உவமைக் கலைந்தும்
உனதாச ராக உவந்தாட,
நிலவே துணிந்து நினைவைத் துறந்து
நினதே நிறத்தில்…ஒளி காட்ட,
தலையே கவிழ்ந்த தணலோன் மலைத்து
தமிழுன்னில் தாகம் தனை மாய்க்க,
அலகில்…அகன்ற அகிலம் வணங்க,
அட… நான் ‘வியத்தல்’….சரிதானா?

முடிவே இலாத முழுசே..அணுக்குள்
‘முகம் பார்க்கில்’ நீயும் முதலாவாய்.
வடிவாளும்.. வாயின், வசனம் உயிர்க்க
‘வடிகட்டி’ வார்த்தை வரம் ஈவாய்.
கொடியே ற்றியிங்கு குவி ‘ராஐ பாக்கள்’
குலையாது மின்னுங் குணஞ் சேர்ப்பாய்.
மடியாய்; எமக்கு ‘முடியாய்’; துணைக்கு
வருவாய்; வசந்த…வழி நீயே!

(1995 ல் அகில இலங்கைக் கம்பன் கழக 15 ம் ஆண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பட்ட ‘கம்ப மலரில்’ எனது கவிதை.)

Posted in கவிதைகள் | Comments Off on கம்பனாம் காலக் கவி

தீப வலி

ஓர் அசுரன்…
இந்த உலகை வதைத்தவன்…தன்
கோரச் செயலுணர்ந்து,
கொடுமைக்குத் தண்டனையாய்
ஊர்தனது சாவை
உளம்மகிழ்ந்து கொண்டாட Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தீப வலி

இருண்மையும் ஒளியும்.

இரவின் அடர்ந்த இருட்டுக்குள்த் தானே
உருவாச்சு கிழக்கில் ஒளியின்
முதற்துளியும்?
அந்த ஒளி ‘நுகத்தை’ ஆக்கியே விட்ட ‘சூல்’
‘விந்து’ எவையெவைகள்
புணரப் பிறந்ததென்ற Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இருண்மையும் ஒளியும்.

சகலகலா சக்தி!

‘சகல கலாவல்லி’, சக்தி, அவளின்
புகழினைப் போற்றும் பொழுதில் – அகங்கள்
குளிரும்; உடலில் குதூகலம் பொங்கும்;
விழிகசியும்; பக்தி மிகும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சகலகலா சக்தி!

முத்தேவியர் புகழ் பாடு.

சிங்கத்தில் வந்தே திசைகாக்கும் ‘துர்க்கை’யவள்
பொங்குகிற வீரத்தைப் போர்த்திறணை -எங்களுக்குத்
தந்தருள்வாள்; சூழும் தடையுடைத்தும் வெல்லவைப்பாள்;
வந்தனைகள் செய்;வா மகிழ்ந்து. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on முத்தேவியர் புகழ் பாடு.

இரவும் ஒரு இறையே!

பெளர்ணமிக்கு ஓரிரு நாட்கள் இருக்கிறது.
கெளவிற்று இரவுப் பறவை
பகற்பழத்தை.
முக்கால் வாசி முட்டை மஞ்சட் கருவாக
நிற்கிறது பொன்நிலவு
எனது தலைக்குமேல். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இரவும் ஒரு இறையே!

கேட்போம் கொடுப்பர்!

அன்னை எனும்சக்தி மூன்று
வடிவெடுக்க அன்னவரை
நின்றும் கிடந்தும் நினைந்து வணங்கி நெகிழ்ந்துருகி
“என்ன கலை செல்வம் வீரம் இருக்கிறதோ எல்லாமும்
குன்றாமற் தாரு”மென்று கேட்போம்; கொடுப்பராம்… கொள்வோமே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கேட்போம் கொடுப்பர்!

வேண்டித் துதி செய்

Posted in Video | Comments Off on வேண்டித் துதி செய்

வேண்டித் துதிசெய்.

கலையாத கல்வியும், கரையாத செல்வமும்,
கனல்கின்ற வீரமதுவும்,
கருகாது வாழ்வினைக் களித்தோங்க வைப்பவை;
கவின் சூழ வரந் தாறவை;
உலகத்தில் உன்பேரை உயர்தாள வைப்பவை;
உடன் தேட… ‘சக்தி’ களினை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேண்டித் துதிசெய்.

“தங்களாலேனும் கிடைக்குமா” என்று

உன் துவக்கின் தோட்டாவோ,
உன் கரத்தின் தடி பொல்லோ,
அன்றவனைச் சாய்க்க…
அள்ளி எடுத்துவந்து;
மாரி பொழிந்துமே வாரடித் தோடியதால்
ஈரஞ் சுவறி இருந்த Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on “தங்களாலேனும் கிடைக்குமா” என்று

மங்கிடாப் புகழாளன்.

எங்களின் குருவாயும், “இது திசை”
என்று ரைத்த ‘கலங்கரை’ யாகவும்,
சங்கை மிக்க ‘யாழ் இந்து’ ஆசான்களில்
தனித்தொளிர்ந்த ‘பிதாமக னாகவும்’,
சிங்கமாகக் கால் பழுதுபட் டாலும்… உள்ச்
சீற்றம் குறையாது ‘வாழ்ந்து… உயர்ந்த’ நம்
‘மங்கிடாப் புகழாளன்’ ‘சிவராம-
லிங்கம்’ மாஸ்ரரை.. நெஞ்சால் வணங்குவோம்!

கற்ற கல்வியால் பெற்ற கம்பீரமும்,
கலை மொழி தேர்ந்து கொண்ட மிடுக்கதும்,
மற்ற வர்க ளிற்காய்த் தன் இயலாமை
மறைத்து… உதவிடும் ஈகைக்குணம் பண்பும்,
உற்ற துன்பம் பொறுத்து… ஊர் உலகிற்
குழைத்தும் தன்நலம் எண்ணாத் தியாகமும்,
நற்றமிழ் சைவம் பேசி அறம் சொல்லுஞ்
ஞானமும், கொள் ‘சிவ ராமர்க்கு’ ஈடுயார்?

‘மூன்று சக்கரச் சைக்கிளாம் தேரிலே’
மூலை முடுக்குகள் யாவும் நிதம் சென்று,
ஆன்றோர் தொட்டு அசடர் வரை நட்பை
ஆண்டு, யார்யா ருக்கோ கரம் தந்து,
சான்றோ னாகவும், ‘நாட்டாமை’ போலவும்,
தமிழடியார்க்குப் ‘பிரம்ம ரிஷி’யாயும்,
தோன்றி – மறைந்தின்று இருபது ஆண்டுகள்
தொலைந்ததா? ‘ஐயன்’ நினைவுகள் நீறுமா?

‘ஆசான் – மாணவர்’ உறவுக் குதாரணம்
ஆனவர் ‘லிங்கர்’; ஆற்றுப் படுத்தியும்,
பேச வைத்தும், பிரபலம் ஆக்கியும்,
‘பின்னிற்க’…மாணாக்கரோ ‘முன்வைத்து’
தேசம் தேசமாய்க் காவித் திரிந்தனர்!
சேவை செய்தனர் கடைசி வரை; அவர்
பாசம் கண்டவர்… இன்று ‘நூற்றாண்டு
அகவை நாளில்’ பணிந்தஞ் சலிக்கிறோம்!

Posted in கவிதைகள் | Comments Off on மங்கிடாப் புகழாளன்.

பாடம்

ஏறெடுத்துப் பார்க்க எவருமற்று
அன்றொருகால்
பாரதி தன்னுடைய ‘பாட்டைத்’
தினமெழுதிக்
குவித்த படியிருந்தான்!
கொடு வறுமை துரத்திவிட, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

செழுமை மிக்கது எங்களின் தாய் மொழி

Posted in Video | Comments Off on செழுமை மிக்கது எங்களின் தாய் மொழி