இடர் மேலாண்மை

‘முன்னாயத் தம்’ என்று முறைக்கு முறைகதைத்து,
என்னென் றியற்கையிட- ரிருந்துதப்புவ தென்றாய்ந்து,
என்னென் றனர்த்தத்தைத் தணிப்பதெனத் திட்டமிட்டு,
என்னென் றிடர்க்குமுகம் கொடுப்பதெனக் கற்பித்து,
ஊரினைக் காப்பதற்கு ஒத்திகை களும்பார்த்து,
ஆயிரம் கதையளந்து,
அவலம் கையாளப் பல்
ஆயிரம் வழிகண்டு,
அதற்கு ஆள் அணி அம்பு
தேடி அனைவரையும் திரட்டி
ஒருங்கிணைத்து,
எப்படி மழைவரும்?
எத்திசையாற் காற்றுவீசும்?
எப்போ வெயிலடிக்கும்?
எத்தனைநாள் துயர் நீளும்?
எப்படிப் புயலலைக்கும்?
எங்கெங்கு வெள்ளமேறும்
எப்படி? எனமுன்பே எதிர்வுகூறியும் நின்று,
எப்படி வெள்ளத்தில் இருந்து மக்களைக்காத்தல்?
எப்படி உறவினர் நண்பர் வீட்டில் இருக்கவிடல்?
எப்படிச் சனத்தை இடம்பெயர்த்துத் தங்கவைத்தல்?
எப்படி நலன்புரி முகாமொன்றைப் பராமரித்தல்?
எப்படி உலருணவு வழங்கல்?
சமைத்துணவு
எப்படி எப்போ எவ் அளவில் கொடுத்துதவல்?
எப்படிப் பாதிப்புச் செய்திகளைப் பரிமாறல்?
எப்படித் தரவேற்றல்?
எப்படி அறிக்கையிடல்?
எப்படி வெள்ளம் வடியும் வழிசெய்தல்?
எப்படி மின்வழங்கல்?
எப்படித் தொடர்பாடல்?
எப்படி வீதிகளில் வீழ்ந்த மரமகற்றல்?
எப்படிப் பயணத் தடைகளினைச் சீர்ப்படுத்தல்?
எப்படிப் பொருத்தமான இயந்திரங்களைத் திரட்டல்?
எப்படி அனைவருக்கும் முன்னெச்சரிக்கை விடல்?
எப்படி சேவைகளை வழமைக்குத்
திரும்பவைத்தல்?
எப்படிப் ‘பேரிடரிருந்து’ முழுதாக மீண்டுவரல்?
என்று…பலகதைத்து;
“எதற்கும் தயார் நாங்கள்”
என்று அறிக்கைவிட்டுக் காத்திருந்து;
பெருமனர்த்தம்
சுழல்காற்றாய், மழையாய், சூறா வளி, புயலாய்,
நிலச்சரிவாய், வெள்ளப் பெருக்காய்,
உறையவைக்கும்
குளிராய்,
பகலிரவு கொட்டம் அடித்தபோது
“நாம் நினைத்த தேதோ
நடந்தது வேறேதோ”வென்-
றானதையோ!
இன்று அனர்த்தத்தின் தாண்டவத்தின்
ஆரம்பத் திலேயே மின் அறுந்து
தொலைந்துபோச்சு.
கையடக்கத் தொலைபேசிக் ‘கவரேஜ்’
மறைந்துபோச்சு.
என்னென்ன வழிகளில் தகவல் திரட்ட எண்ணி
நின்றிருந்தோம்?
அத்தனையும் நிமிடத்துள் ஊமையாச்சு.
Watsup, viber, email, voice massege யாவும்
முற்றாய்ச் செயலிழந்து முடிந்தது.
தொலைத்தொடர்புத்
தந்தி, Fax இணைப்பு, சாத்தியமற் றதாச்சு.
பாதை வழித்தடத்தில் பயணம் தடையாச்சு.
வானப் பறப்பு மட்டுப் படக், கடல்
ஓரம் தலைவைத்தல் முடியாக் கதையாச்சு.
போட்ட சல்லி, மண்ணை வெள்ளம் புசித்தரிக்கத்
தூங்கிற்றுத் தண்டவாளம்.
தொடருந்து நின்றுபோச்சு.
இடம்பெயர்ந்த சீவன்களை
ஏற்றி இறக்குதற்குத்
தடையாக வீதிகள் தண்ணீரில் மூழ்கிற்று.
கடையெல்லாம் பூட்டு.
கடமைசெய்ய வந்தவர்க்குக்
கிடைக்கவில்லை சோறு.
தொலைந்த உயிர் நூறுநூறு.
மீட்பு நடவடிக்கை முடியவில்லை வென்று.
கேட்டவரம் சில கிடைக்க
கிடைக்கவில்லை வரத்தின்
நன்மைப் பயன்திரண்டு.
“நன்றாகத் திட்டமிட்டு
என்னமுன் ஆயத்தம் எதுசெய்தும்
எனைத்தடுத்தல்,
என்னை அடக்கல், எனைவெல்லல்,
மிகக் கடினம்”
என்றும்;
“என்முன் நும் ஆற்றல், கருவி, பொறி,
முன்னாயத்த திட்டமிடல் முயற்சியெல்லாம்
தூசு” என்றும்;
சொல்லி ‘இயற்கை’தன் சூரத்தன வலிமை
சொல்லிடுது அடிக்கடி!
தன்னைச் சொறிந்தால்…
“எல்லாம் பிழைக்கும்”என எழுதிடுது விதி”! நிதம் தன்
வல்லமையைக் காட்டி…
உலகத் திசையெங்கும்
சொல்லிடுது பலசேதி!
“என்னநாம் கற்ற பாடம்?”
என்றறியோம்;
புதுப்புது அனர்த்த இடர் சாய்க்க
சின்னாபின்ன மாகித்
திகைத்தழிந்து கொண்டுள்ளோம்!

Posted in கவிதைகள் | Comments Off on இடர் மேலாண்மை

திக்(வா) விஜயம்

“அழிவு எங்கெங்கும் அழிவுகள்” என்றுதான்
அங்கும் இங்குமே செய்திகள் பேசின.
அழிவு, மரணங்கள் என்று அடிக்கடி
அன்று… போரிடை வந்திட்ட செய்திகள்
முழுதும் ஓய்ந்து அப்பப்போ அங்கங்கு
மோதல், விபத்து, வாள் வெட்டுகள்,போதையால்
இழப்பு, நோய்களாற் சாவு, எனச்செய்தி
இருந்தது; அந்த நிலை தலை கீழாச்சு!

எங்கோ இருந்து இருதிசையாற் பூந்து,
“இந்த நூற்றாண்டில் இதுபோற் புயல்வந்த
திங்கு இல்லை” எனும்படியாய்த் ‘திக்வா’
இரைந்து இரண்டு மூன்று தினம் நின்று
பங்கம் செய்ய முழு நாடும் முதல்முறை
பயந்தது ‘ சிவப் பெச்சரிக்கை’ பெற்று!
எங்கும் கொட்டிற்று மாரி; சிலநாளுள்
‘ஆண்டு மழைவீழ்ச்சி’ எண்திக்கும் சூழ்ந்தது!

வெள்ளம் நிறைந்தது வீதி வயல் நிலம்
வெட்டை கிராமம் நகரங்கள் யாவிலும்.
உள்ள திசையெலாம் வீசிச் சுழல்காற்று
உலுப்பி மரங்களை பேர்த்து எறிந்தது.
வெள்ளம் ஊறிய ஈரலிப்பால் சாய்ந்து
வீழ்ந்தன மண்மேடு, மலை, குன்று.
அள்ளிக் கொண்டோடிற்று அணைகளைப் பாலத்தை
அடித்த நீரோட்டம்… தெருக்களைத் தின்றது!

பாரிய நீர்த்தேக்கம் குளமெலாம்
பணிந்தன இந்தக் கோரப் புயலின்முன்.
‘வால்க்கட்டு’ வெட்டி அயல்களைக் காத்திட்ட
வரலாறு…பல குளங்களைக் காத்தது.
கோரத் தாண்டவம் ஆடிற்று சா; பல
குவியல் குவியலாய் மண்சரிவில், வெள்ளம்
மூழ்கடிக்கையில், மீட்க ஆளற்றவர்
முடிந்தனர்; மீட்க வந்தோரும் மாண்டனர்.

நீரில் மூழ்கின படகுகள் வள்ளங்கள்,
நீந்தின தெருக்களில் வாக னங்களும்.
மாய்ந்தது மின் சாரம். வலைத்தளம்
மரித்தது. கை பேசிகள் செத்தன.
பாதைகள் பல பாற.., புகைவண்டிப்
பாதையில் தண்டவாள எலும்புகள்
மீதமாயின. வெள்ளத்தில் கால்நடை
விறைத்து நூற்றுக் கணக்கிலே மாண்டன.

மண் சரிவுள் புதைந்தோரைக் காப்பதா?
வழியா வெள்ளத்தை வெட்டி விடுவதா?
மண் அணைகட்டிக் குளம் உடைப்பெடுக்காது
மறிப்பதா? சூழ்ந்த வெள்ளத்துள் மூழ்கியே
துண்டிக்கப் பட்டோரை வான்வழி மீட்பதா?
தொலைந்து போனோரைத் தேடித் திரிவதா?
உண்ணக் குடிக்க ஒன்றுமில் லாதோர்க்கு
உதவி செய்வதா? ஊர்கள் தவித்தன!

எனக்குப் பிரச்சனை இடர்கள் எதுமில்லை
என்றிடில் யான் பிறர்க்கு உதவலாம்.
எனக்கிருப்பதை இல்லாதோர் நொந்தோர்க்கும்
ஈயலாம்; முழு நாடும் இடருக்குள்
தனித்திருக்கையில் யாருக்கு யார் எதைத்
தருவது? ஆறு தலை எவர் சொல்வது?
தனதுயிர் பற்றி எண்ணாதிந் நிலையுள் தோள்
தந்தவர்களை யார்தான் மறப்பது?

வீழ்ந்த மரங்களை வெட்டி அகற்றவும்
வெள்ளம் வடிந்திட வாய்க்கால்கள் வெட்டவும்
சாய்ந்த மின்கம்பம் மின் வடம் மீட்கவும்
சகல பகுதிக்கும் ‘கவரேஜ்’ வழங்கவும்
பாலம் பாதைகள் மீள அமைக்கவும்
பசியைப் போக்கவும் தாகம் தணிக்கவும்
தேவைப் பொருட்களைத் தேடிக் கொடுக்கவும்
திரள்கிறார் பலர் தேசம் கைகோர்த்ததாம்.

Posted in கவிதைகள் | Comments Off on திக்(வா) விஜயம்

‘விலான கம’, ரம்புக்கணை.

உறங்கிக் கிடந்தது ஊர்;
நேற்று மட்டுமல்ல
பரம்பரை பரம்பரையாய் வசித்து
மகிழ்ந்துயிர்த்த
ஊரது;
நிம்மதியாய் உண்டு களித்துறங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘விலான கம’, ரம்புக்கணை.

பாடம்

இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது.
இயற்கையை அடக்க
எவராலும் இயலாது.
இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஏலாது.
இயற்கை ஏன் மாறுதென்று
எவரும் கேட்கலாகாது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

காலக் குருதி

காலமோ நிற்காமல் கணம்கணமும் தொடர்ந்து
ஓடிக்கொண் டிருக்கும் உயிர்க்குருதி!
எப்படித்தான்
குருதி உடலுள் சுழன்றோட
உயிர்துடித்து
இருக்குமோ…அப்படி இக்காலக் குருதி ஓட… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலக் குருதி

நேருவோம்

வாடிக் கிடக்கும் நிலமெலாம் – மழை
வார்த்து மகிழ்ந்தது வான்முகில் -துணை
தேடித் தவிக்கும் உயிர்க்கெலாம்- சுகம்
சேர்த்துப் பொழிந்தது பொன்மழை -அனல்
கூடி எரித்த சிதைகளும் – நூர்ந்து
கொள்ளவே…ஆறிற்று தாய்மடி -உயிர் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நேருவோம்

சிவனுக்கு விண்ணப்பம்.

‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த
மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன்
ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து
அற்புதம் செய்பவரோ சில பேர்களே!
ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு
ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சிவனுக்கு விண்ணப்பம்.

எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

தேனாறு பாயாத போதும்,
தினந்தினமும்
பாலாறு பாயாத போதும்,
எம் நிலம் சிரிக்கும்.
சாவைத் துரத்திச் சரித்து
நம் திசையெங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

யாழ்ப்பாண இடம்பெயர்வு

கவிஞர் ஜெயசீலனின் பிரியாவிடைக் காவியம் நெடுங்கவிதை ஆற்றுகை. அளிக்கை செய்வோர் பரதன் , பார்த்தீபன் ,வேந்தன் , தேவானந்த் 1995 ஒக்ரோபர் யாழ்ப்பா இடம்பெயர்வைப் பேசும் கவிதை நன்றி -நிகழ்Tv
Posted in Video | Comments Off on யாழ்ப்பாண இடம்பெயர்வு

வருவார்கள்…அவனும் வருவான்!

“எனக்குத்தான் எல்லாமும் தெரியும்
பிறர்பற்றி
எனக்கென்ன?
அவர்க்கு என்ன தெரியும்” என்ற
அலட்சியமும்,
அபரிமித ஆற்றல் பலம் திறனும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வருவார்கள்…அவனும் வருவான்!

கம்பனாம் காலக் கவி

அழகான பாக்கள் அதிலே கனாக்கள்
அடி ஆழமுள்ள உனதாற்றில்…
விளையாட எண்ணி விழிகள் பிதுங்கி
மிதவா தமிழ்ந்தேன் நினதேட்டில்.
களமாடல், காதல், கடல் தாண்டி மோதல்,
கருவாய் மிளிர்ந்த கவிமேட்டில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கம்பனாம் காலக் கவி

தீப வலி

ஓர் அசுரன்…
இந்த உலகை வதைத்தவன்…தன்
கோரச் செயலுணர்ந்து,
கொடுமைக்குத் தண்டனையாய்
ஊர்தனது சாவை
உளம்மகிழ்ந்து கொண்டாட Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தீப வலி

இருண்மையும் ஒளியும்.

இரவின் அடர்ந்த இருட்டுக்குள்த் தானே
உருவாச்சு கிழக்கில் ஒளியின்
முதற்துளியும்?
அந்த ஒளி ‘நுகத்தை’ ஆக்கியே விட்ட ‘சூல்’
‘விந்து’ எவையெவைகள்
புணரப் பிறந்ததென்ற Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இருண்மையும் ஒளியும்.

சகலகலா சக்தி!

‘சகல கலாவல்லி’, சக்தி, அவளின்
புகழினைப் போற்றும் பொழுதில் – அகங்கள்
குளிரும்; உடலில் குதூகலம் பொங்கும்;
விழிகசியும்; பக்தி மிகும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சகலகலா சக்தி!

முத்தேவியர் புகழ் பாடு.

சிங்கத்தில் வந்தே திசைகாக்கும் ‘துர்க்கை’யவள்
பொங்குகிற வீரத்தைப் போர்த்திறணை -எங்களுக்குத்
தந்தருள்வாள்; சூழும் தடையுடைத்தும் வெல்லவைப்பாள்;
வந்தனைகள் செய்;வா மகிழ்ந்து. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on முத்தேவியர் புகழ் பாடு.