ஏமாளி

“ஏமாளி நீ” என்றாய்.
“இந்த உலகத்தில்
வாழத் தெரியா வகையில் நீயும் ஒன்று” என்றாய்.
நீதி நியாயங்கள்,
நேர்மை அறம் உண்மை
பாவத்திற் கஞ்சல்,
“பரலோக தெய்வங்கள்
தண்டிக்கும்” என்றபயம்,
“சமூகம் எதைச் சொல்லும்”
என்ற தயக்கம்,
“மானம் தொலைந்துவிட்டால்
வாழவே கூடாது” எனும் கொள்கை,
அடிக்கின்ற
காற்றின் வழத்திற்கு எல்லாம்
தலைக்கறுப்பைக்
காட்டாது வாழ்கின்ற கண்ணியம்,
“கடமைக்கு
ஏற்ற பலன்போதும்…
எல்லாம் எனக்கென்றேன்
வாழவேண்டும்” என்கின்ற வைராக்யம்,
யாரென்ன
சொன்னாலும் சுயநலம் காத்து…
“இலாபமெங்கே”
என்றதற்காய் எந்த எல்லைக்கும்
‘இறங்காத’
எண்ணம்,
“பிழைவஞ்சம் எதுஞ்செய்து…
உய்தெதுவும்
மிஞ்சாது” என்ற மிகுதெளிவு,
‘இவை’ கொண்டு
வாழ்வை…நெளிந்து வளையாத
நேர்கோட்டில்
வாழ்வதனால்;
பிறரை ஏய்த்து வளர்ந்தொளிராக்
காரணத்தால்;
“கர்ணன், அரிச்சந்திரன் போன்று
வாழவேணும்” என்று…
வந்த வாய்ப்புகளை மறுத்து
ஆளத் தெரியாது,
அடுத்தவரின் சொத்து செல்வம்
தேடத் தெரியாது,
‘அப்படியே’ இருப்பதனால்;
“பேயன் நீ” என்றாய்…
“பிழைக்கத் தெரியாத
சேயன் நீ” என்றாய்… சிரித்தகன்றேன்!
‘இவை’ செய்து
ஏய்த்தவர்கள் என்னானார் சிலநாளில்..? என நாளும்
பார்ப்பதனால்;
உனை நாளை பார்க்கவும் போவதனால்;
“பேயனென்றே சொல்” என்று
பேசாமல் திரும்புகிறேன்!
“காலம், அறம், தெய்வம் காட்டும்
நல் வழியை” என்று,
” போதும் இதே” என்று
போய்க்கொண் டிருக்கின்றேன்!

Posted in கவிதைகள் | Comments Off on ஏமாளி

வளர்வோம்

விடிவெள்ளி எழுமென்று விழிபூத்திருந்தோம்.
விதிமாற்றும் திசைநோக்கி வழிபார்த்திருந்தோம்.
தொடுவானில் தெரிகின்ற திலக்கென்றிருந்தோம்.
தொடர்ந்தேனோ தடம்மாறித் தடுமாறுகின்றோம்?

எமைக்கூட்டிச் செல யாரும் இலை என்ற துன்பம்
எமக்கான வழிசொல்ல இலையாரும் முன்பும்.
எமைவீழ்த்தத் தடைபோட, எமைச்சுற்றிப் பொங்கும்
எமர் ஓட…விரட்டாட்டி எது கையில் மிஞ்சும்?

வரலாற்றின் புனிதங்கள் வரமற்றுப் போமோ?
வளர்ந்தோங்க முயல்கின்ற மனம் நொந்து போமோ?
எரிபற்று நிலைகெட்டுத் திரி நூர்ந்து போமோ?
இருளோட்ட வருந்தீபம் அணைந்தற்றுப் போமோ?

கனவிங்கு நனவாகக் கருமங்கள் நாட்டி,
கடமைக்கு விசுவாசம் செயல் தன்னில் காட்டி,
மனதுக்குள் ஒளியேற்றித் துணிவூட்டி மீட்டி,
மனிதப் பண்பழியாமல் வளர்வோம் பேர்ஈட்டி.

Posted in கவிதைகள் | Comments Off on வளர்வோம்

சான்று

எப்படி வந்தது இக்குழிக்குள் அப்பொம்மை?
எப்படி வந்தது?
இதன் ‘உரிமையாளனுடன்’
விளையாடிக் கொண்டிருந்த வேளையிலே…
அவனோடு
அளவளாவி நின்றதுவோ? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சான்று

இன்று வரை…

தோண்டக் கிழங்குவரும்
வளம்சூழ்ந்த நம் அயலில்
தோண்ட… எலும்புகளின் கூடுவரும் துயர்க்காலம்!
சுடலைதான்;
‘எரிக்கும் சுடலைதான்’;
அதற்குளின்று Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இன்று வரை…

வேண்டாத போர்

“வாழத்தான் பூமிவந்தோம்;
வதைசுமக்க அல்ல” என்று
போரை வெறுத்து
புதுமையுடன் அன்பினது
ஆழ இணைப்பில் அனைவருமே ஒற்றுமையை
ஆளத்தான் காத்திருந்தோம்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேண்டாத போர்

உலகமும் நாமும்

ஓரிரு நொடிப் பொழுதில் பெரும்பெரும்
ஒளிர் நகர்கள் இடிந்திருள் சூழ்ந்தது.
பேயிரைச்ச லோடேவு கணை நிரை
பேரிடிகளாய் இலக்கைச் சரித்தது.
ஆயிரம் மைல் தாண்டி அவைபாய்ந்து
அழித்தன நெடு மாடிகள் யாவையும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உலகமும் நாமும்

பதிலென்ன?

யாரென்ன சொன்னாலும்
யார் எதுதான் செய்தாலும்
யாரெவரைத் தேரிலேற்றி முடிசூட்டி விடுவதென்றோ…
யாரெவரைத் தள்ளிவீழ்த்தித் தாழ்த்தி மிதிப்பதென்றோ…
யாரெவரின் உயிரை எப்போது எடுப்பதென்றோ…
யாரெவரை மயிரிழையில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பதிலென்ன?

என் சாபம்

ஓரிரு நொடியில் உயர்ந்த பெருவிமானம்
கீழே தடுமாறி வீழ்ந்து வெடித்ததையோ!
இயக்கி நகரவைத்த எரிபொருளே
விமான உடல்
உயிரைத் தகனக் கிரிகைசெய்து
தீய்த்ததையோ! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on என் சாபம்

எரிந்த நாள்

எங்கெங்கோ இருந்த எங்களது வேர்களினை
அங்குதேடிச் சேகரித்தோம்.
நம் ‘ஞானப் பெட்டகமாய்’
அமைத்திருந்தோம் அதனை.
ஆவணங்கள், சுவடிகள்
எமது சரிதம் இயம்பிய நூல், பத்திரிகை, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எரிந்த நாள்

புயலிடை நின்ற மரங்கள்.

கண்களில் தெரிந்தது கனவதன் கோலம்.
கண்ணீரில் கரைந்தது நனவினில் யாவும்.
புண்களே மிகுந்தன பொன்னுடல் எங்கும்.
பூசவோ மருந்திலை வலிகளே மிஞ்சும்.
பண்களில் மகிழ்ச்சிகள் மலரலை இன்னும்.
பாட்டுகள் ‘திரிந்தன’ அந்நியம் மின்னும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புயலிடை நின்ற மரங்கள்.

மலைத்தோம் கண்டு!

தீந்தமிழின் அடையாளம்,தெய்வச் சொத்து,
‘சிறுவாழ்வின்- பேருண்மை’ பகரும் வேதம்,
வான் மறை,நற் தெய்வ வாக்கு,அடிகள் ரெண்டுள்
வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள்,
மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல், வைய
மாந்தருக்கும் அருமருந்து,அமுது,என்று Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மலைத்தோம் கண்டு!

உயர்வுக்காய்த் துணையும் நல்கு

யாழ்ப்பாணம் இந்துப் பண்ணை
யாம் பெற்ற இரண்டாம் அன்னை!
வாழ்வில் யாம் உயர…லட்சம்
வரம் தந்த தெய்வ அன்னை!
நாளொரு பொழுதாய்.. நாம் அந்
நாயகி மடி தவழ்ந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உயர்வுக்காய்த் துணையும் நல்கு

உன்னைக் காணல்

ஒவ்வொரு வரும் ஒவ்வோர் விதத்தில் உனைக்காண்பர்.
ஒவ்வொரு வரும் ஒவ்வோர் வழியில் உனைக்காண்பர்,
அற்புதப் பதிகங்கள் பாடி உனைக் காண்பர் சிலர.;
கற்பூரச் சட்டியதன் சூட்டில் உனைக் காண்பர் சிலர்.
கண்மல்கி ஆறுகாலப்
பூசைகளில் காண்பர் சிலர். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உன்னைக் காணல்

உனது வெற்றிடம்

கடல் சுதி மீட்டிட, அலை ஜதி போட்டிட,
கவி நூறு பாடி வருவாய்.
கனவினில் கண்டவை நனவினில் கைவரக்
கருவியாய்க் கலையைத் தொடுவாய்.
விடையிலாக் கேள்விகள் மிகமிக அதிகமே…
விளங்கிதை; ஞானம் பெறுவாய். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உனது வெற்றிடம்

கொடுங் கோடை

தீப்பிடித்து எரிகிறது எங்களது பகல்கள்.
ஏப்பம் இடுகிறது அனல்
எட்டுத் திசைகளையும்.
யாரெவரின் பெருமூச்சு அனற்காற்றாய் அடிக்கிறது?
யார் கரித்து இட்ட சாபம் கனலை வளர்க்கிறது?
மண்ணும் மரமும் வனமும் குளம் கடலும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கொடுங் கோடை