“தங்களாலேனும் கிடைக்குமா” என்று

உன் துவக்கின் தோட்டாவோ,
உன் கரத்தின் தடி பொல்லோ,
அன்றவனைச் சாய்க்க…
அள்ளி எடுத்துவந்து;
மாரி பொழிந்துமே வாரடித் தோடியதால்
ஈரஞ் சுவறி இருந்த
சுடலை மண்ணில்,
மைம்மற் பொழுதில்,
மண்வெட்டியால் மேலால்
சும்மா கிளறி நட்டாய்!
சூழ மனிதரற்ற
நாட்களில் பேய்களே நடமாட…
பிணங்கள்
கூட்டம் கூட்டமாக அங்கு வந்து குவிய…
நீயும் உன்னோடு நின்றோரும்
கடைவாயில்
ஓடும் குருதியை
ஒருகையாற் துடைத்தபடி
அவனையும் புதைத்து அகன்றீர்கள்.
அடுத்தெங்கே
எவன்என்று பேசி நகர்ந்தீர்கள்.
அவனின்
உயிரும் குரலும் உணர்ச்சிகளும்
கண்ணீரும்
அயலை அசைக்க ஏலா யதார்த்தத்தில்…
நீதி கேட்டு
அவன்குருதி முதலில்
அயலெங்கும் சிந்திற்று!
சிதைந்த பிணநாற்றம்
நியாயத்தைத் தேடிற்று!
உதிர்ந்த முடி, தோலும்
ஒழுகிய நிணம், கொழுப்பும்,
எங்கேனும் அறமிருக்கா என்றேங்கிப் பார்க்க…தன்
பங்கிற்குத் தசை,நரம்பும் அழுகி
எவரேனும்
தர்மர்கள் உள்ளனரா எனக்காத்துச் சிதைந்தழிய…
இருந்த உக்காப் பொருட்கள்
இனங்காட்ட ஏங்கிநிற்க…
விரைவில் சிதறியுக்கி,
கிருமிகளால் பிரிகையாகி,
அவனும்…
அவனோடு அள்ளிவரப் பட்டவரும்
எவரும்…தம் இறப்பிற்கு
எதும் பரிகாரமற்று;
” ஏன்மரித்தோம்” என்பதற்கு
ஏற்றபதில் கிடைக்காது;
மண்ணோடு மண்ணானார்!
நேற்றைக்குத் தற்செயலாய்
எலும்புக் கூடொன்று கிடங்கு வெட்ட
வந்து…பின்
பொலுபொலென்று இருநூறு
கூடுகள் புறப்பட்டு
“இறுதி நீதி தங்களால் எனினும்
கிடைக்கு” மென்றா
வெறித்தபடி எங்கள்
விழிகளையே பார்த்துளன?
வரும் நல்ல தீரப்பென்றா சாட்சிசொல்லக் காத்துளன?

Posted in கவிதைகள் | Comments Off on “தங்களாலேனும் கிடைக்குமா” என்று

மங்கிடாப் புகழாளன்.

எங்களின் குருவாயும், “இது திசை”
என்று ரைத்த ‘கலங்கரை’ யாகவும்,
சங்கை மிக்க ‘யாழ் இந்து’ ஆசான்களில்
தனித்தொளிர்ந்த ‘பிதாமக னாகவும்’,
சிங்கமாகக் கால் பழுதுபட் டாலும்… உள்ச்
சீற்றம் குறையாது ‘வாழ்ந்து… உயர்ந்த’ நம்
‘மங்கிடாப் புகழாளன்’ ‘சிவராம-
லிங்கம்’ மாஸ்ரரை.. நெஞ்சால் வணங்குவோம்!

கற்ற கல்வியால் பெற்ற கம்பீரமும்,
கலை மொழி தேர்ந்து கொண்ட மிடுக்கதும்,
மற்ற வர்க ளிற்காய்த் தன் இயலாமை
மறைத்து… உதவிடும் ஈகைக்குணம் பண்பும்,
உற்ற துன்பம் பொறுத்து… ஊர் உலகிற்
குழைத்தும் தன்நலம் எண்ணாத் தியாகமும்,
நற்றமிழ் சைவம் பேசி அறம் சொல்லுஞ்
ஞானமும், கொள் ‘சிவ ராமர்க்கு’ ஈடுயார்?

‘மூன்று சக்கரச் சைக்கிளாம் தேரிலே’
மூலை முடுக்குகள் யாவும் நிதம் சென்று,
ஆன்றோர் தொட்டு அசடர் வரை நட்பை
ஆண்டு, யார்யா ருக்கோ கரம் தந்து,
சான்றோ னாகவும், ‘நாட்டாமை’ போலவும்,
தமிழடியார்க்குப் ‘பிரம்ம ரிஷி’யாயும்,
தோன்றி – மறைந்தின்று இருபது ஆண்டுகள்
தொலைந்ததா? ‘ஐயன்’ நினைவுகள் நீறுமா?

‘ஆசான் – மாணவர்’ உறவுக் குதாரணம்
ஆனவர் ‘லிங்கர்’; ஆற்றுப் படுத்தியும்,
பேச வைத்தும், பிரபலம் ஆக்கியும்,
‘பின்னிற்க’…மாணாக்கரோ ‘முன்வைத்து’
தேசம் தேசமாய்க் காவித் திரிந்தனர்!
சேவை செய்தனர் கடைசி வரை; அவர்
பாசம் கண்டவர்… இன்று ‘நூற்றாண்டு
அகவை நாளில்’ பணிந்தஞ் சலிக்கிறோம்!

Posted in கவிதைகள் | Comments Off on மங்கிடாப் புகழாளன்.

பாடம்

ஏறெடுத்துப் பார்க்க எவருமற்று
அன்றொருகால்
பாரதி தன்னுடைய ‘பாட்டைத்’
தினமெழுதிக்
குவித்த படியிருந்தான்!
கொடு வறுமை துரத்திவிட, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

செழுமை மிக்கது எங்களின் தாய் மொழி

Posted in Video | Comments Off on செழுமை மிக்கது எங்களின் தாய் மொழி

‘அன்னதானக் கந்தன்’ அற்புதம்

ஆற்றங்கரை யோரம் ‘நர சமுத்திரம்’ திரண்டது.
அதன் அலைகளாய் சனத் தலைகளே அசைந்தது.
ஊற்றுப் பொங்கி ‘சந்நிதியில்’ அருள் மழை பொழிந்தது.
ஊர்களே திரண்டு தேரைக் கண்டு அதில் நனைந்தது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘அன்னதானக் கந்தன்’ அற்புதம்

சந்நிதிப் பாதை

புதிய உலகம் பொருள்பின் அலையும்;
பொருளற் றெளிய பொருள்தன்னை
புகழும்; புளுகிப் புரளும்; அதனில்
பொடியின் அளவே நிதமொட்டும்!
இதனைப் பலரும் புரிவ திலையே,
இதயக் கருணை யுடன் யார்க்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சந்நிதிப் பாதை

கனவுக் கவி !

கவிதை என்பது கனவு போன்றது!
கனவு ஆயிரம் கவின் அருள்வது,
எவரின் ஏக்கமும் தணிய வைப்பது,
இடிகள் தம்மையும் பொடிகள் செய்வது,
தவிக்கும் வாய்களில் அமுதருள்வது,
தடைகள் யாவையும் தகர வைப்பது, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கனவுக் கவி !

பார்த்துச் சிலிர்த்தருள்வான்.

கண்திறந்து தன்அடியார் காட்டுகிற பக்தியினைத்,
துன்பம் சுமந்து
தொடர்ந்து செய்யும் நேர்த்திகளைப்,
பார்த்துச் சிலிர்த்தருள்வான்…
பார்போற்றும் நல்லூரான்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பார்த்துச் சிலிர்த்தருள்வான்.

திரு நல்லை.

யாழின் தனித்துவம்.
யாழின் பெருமையம்சம்.
யாழின் திமிர், கர்வம்.
யாழ் மரபின் குறியீடு.
யாழ்ச் சைவக் கலாசார வாழ்வின்
அடையாளம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on திரு நல்லை.

வென்று எழ வை!

ஏது பிழை ஏது சரி என்று உரைப்பாயா?
ஏங்கியழும் எம் இதயம் கண்டு களிப்பாயா?
ஆதரவு தந்து எமைத் தொட்டு அணைப்பாயா?
அச்சமொடு ஐயமதும் ஓட அருள்வாயா?
வேதனைகள் சூழ்ந்துவரும் வெட்டி அழிப்பாயா?
வேகும் வரை பார்த்திருந்து மீட்டு எடுப்பாயா? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வென்று எழ வை!

உன்னை விட மாட்டோம்.

நாதமழை வேதமழை நம்கண் மழை யாலே
நாற்திசையும் பக்திபுனல் பாய்ந்து வரும் போதே
வீதிகளில் வீழ்ந்தடியார் சொல்லும் குறை நூறே!
மேவியவை தீர்த்தருள தேரில் எழு வாயே!
சோதனைகள் ஆயிரமாய்ச் சூழ்ந்துவரும் காலம்
தோன்றும் திருநாளில் பதில் பெற்றுத் தர வேணும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உன்னை விட மாட்டோம்.

தமிழின் தலைவன் முருகன்

(தனன தனன தனன தனன
தனன தனன தன தான….சந்தம்)

எனது மனதில் ‘பதி- வை’… ‘கவி-தை’;
இரவும் பகலும் அதைநானும்…
எழுதி உலகும் வியக்கும் வகையில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தமிழின் தலைவன் முருகன்

மாம்பழமும் வேட்டையும்

நாளும் ஒவ்வொரு விதமாய் நடக்கும் திருவிழா -திரு
நல்லையிலே நித்தம் புதிய சேதி சொல் உலா!

காலையிலே மாம்பழத்திற் காக மோதினான் – அண்ணன்
கணபதியும் கனியைக் கொள்ள பழநி ஏகினான்.
ஆண்டிக் கோலத்தோடு வேலன் வாடியேங்கினான் – அந்த
அரிய கனியினாலே என்ன ஞானம் சொல்கிறான்? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மாம்பழமும் வேட்டையும்

உள்ளப் பனிக்கட்டி உருகி…

உள்ளப் பனிக்கட்டி உருகிக் கரைந்துவரும்
வெள்ளம் இருகண்ணால் வழிந்து
விழுந்தோட
நிற்கின்றோம்;
நின்றன் நிஜஎழிலைக் கண்டு…வீதி
சுற்றி வருகையிலே Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உள்ளப் பனிக்கட்டி உருகி…

அவன் செயல்

‘பணிப்-பகை மயிலில்’ பவனிவந்து
எங்களது
‘பிணிப்- பணிகள்’ தம்மை
பிய்த்துக் குதறிடுது
ஆழ்ந்தகன்று நுணுகிய ‘அழகுவேல்’!
நம்…புரியா Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அவன் செயல்