இருண்மையும் ஒளியும்.

இரவின் அடர்ந்த இருட்டுக்குள்த் தானே
உருவாச்சு கிழக்கில் ஒளியின்
முதற்துளியும்?
அந்த ஒளி ‘நுகத்தை’ ஆக்கியே விட்ட ‘சூல்’
‘விந்து’ எவையெவைகள்
புணரப் பிறந்ததென்ற
விடை தெரியாக் கேள்வி மனதைக் குடைந்திருக்கும்!
ஒளி ‘நுகம்’ …கணங்கள்
ஒவ்வொன்றும் கழிய
ஒளி ‘இழையம்’ ஆகி,
ஒளி ‘ அங்கங்களாய்’ மாறி,
ஒளி ‘ உடலம்’ தோன்றி,
ஒளிக்கதிர் விரல்களுடன்
ஒளிப் பகலாய் ஊறி,
புவியொளித்து வைத்தமர்மம்
துலக்கி,
திசைநான்கை துடைத்துலகம்
பார்க்கவைத்துச்
சிலிர்ப்பான காலையைச் செய்திடுது!
இரவின்
கருப்பை கிழித்துமே
காலால் வெளியேறும்
‘பொறி – ஒளி’ எவ்வாறு பூதமாய் வளர்ந்திடுது?
மறுபடியும் அந்தியில்
மரிக்கும் ஒளிச் சடலத்தை
சிறிது சிறிதாய்ச் சிதைத்து விழுங்கியே
இரவு பழிதீர்த்து எழும்;
அதன் கருப்பைக்குள்
ஒளியின் ‘நுகம்’ மீண்டும் எவ்வாறு உருவாகும்?

அழகியல் கற்பனை ஓசை போனால்..
கவிதையிலும்
ஒளி எங்கே தோன்றும்?
இருண்மையா கவியாகும்?

Posted in கவிதைகள் | Comments Off on இருண்மையும் ஒளியும்.

சகலகலா சக்தி!

‘சகல கலாவல்லி’, சக்தி, அவளின்
புகழினைப் போற்றும் பொழுதில் – அகங்கள்
குளிரும்; உடலில் குதூகலம் பொங்கும்;
விழிகசியும்; பக்தி மிகும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சகலகலா சக்தி!

முத்தேவியர் புகழ் பாடு.

சிங்கத்தில் வந்தே திசைகாக்கும் ‘துர்க்கை’யவள்
பொங்குகிற வீரத்தைப் போர்த்திறணை -எங்களுக்குத்
தந்தருள்வாள்; சூழும் தடையுடைத்தும் வெல்லவைப்பாள்;
வந்தனைகள் செய்;வா மகிழ்ந்து. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on முத்தேவியர் புகழ் பாடு.

இரவும் ஒரு இறையே!

பெளர்ணமிக்கு ஓரிரு நாட்கள் இருக்கிறது.
கெளவிற்று இரவுப் பறவை
பகற்பழத்தை.
முக்கால் வாசி முட்டை மஞ்சட் கருவாக
நிற்கிறது பொன்நிலவு
எனது தலைக்குமேல். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இரவும் ஒரு இறையே!

கேட்போம் கொடுப்பர்!

அன்னை எனும்சக்தி மூன்று
வடிவெடுக்க அன்னவரை
நின்றும் கிடந்தும் நினைந்து வணங்கி நெகிழ்ந்துருகி
“என்ன கலை செல்வம் வீரம் இருக்கிறதோ எல்லாமும்
குன்றாமற் தாரு”மென்று கேட்போம்; கொடுப்பராம்… கொள்வோமே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கேட்போம் கொடுப்பர்!

வேண்டித் துதி செய்

Posted in Video | Comments Off on வேண்டித் துதி செய்

வேண்டித் துதிசெய்.

கலையாத கல்வியும், கரையாத செல்வமும்,
கனல்கின்ற வீரமதுவும்,
கருகாது வாழ்வினைக் களித்தோங்க வைப்பவை;
கவின் சூழ வரந் தாறவை;
உலகத்தில் உன்பேரை உயர்தாள வைப்பவை;
உடன் தேட… ‘சக்தி’ களினை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேண்டித் துதிசெய்.

“தங்களாலேனும் கிடைக்குமா” என்று

உன் துவக்கின் தோட்டாவோ,
உன் கரத்தின் தடி பொல்லோ,
அன்றவனைச் சாய்க்க…
அள்ளி எடுத்துவந்து;
மாரி பொழிந்துமே வாரடித் தோடியதால்
ஈரஞ் சுவறி இருந்த Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on “தங்களாலேனும் கிடைக்குமா” என்று

மங்கிடாப் புகழாளன்.

எங்களின் குருவாயும், “இது திசை”
என்று ரைத்த ‘கலங்கரை’ யாகவும்,
சங்கை மிக்க ‘யாழ் இந்து’ ஆசான்களில்
தனித்தொளிர்ந்த ‘பிதாமக னாகவும்’,
சிங்கமாகக் கால் பழுதுபட் டாலும்… உள்ச்
சீற்றம் குறையாது ‘வாழ்ந்து… உயர்ந்த’ நம்
‘மங்கிடாப் புகழாளன்’ ‘சிவராம-
லிங்கம்’ மாஸ்ரரை.. நெஞ்சால் வணங்குவோம்!

கற்ற கல்வியால் பெற்ற கம்பீரமும்,
கலை மொழி தேர்ந்து கொண்ட மிடுக்கதும்,
மற்ற வர்க ளிற்காய்த் தன் இயலாமை
மறைத்து… உதவிடும் ஈகைக்குணம் பண்பும்,
உற்ற துன்பம் பொறுத்து… ஊர் உலகிற்
குழைத்தும் தன்நலம் எண்ணாத் தியாகமும்,
நற்றமிழ் சைவம் பேசி அறம் சொல்லுஞ்
ஞானமும், கொள் ‘சிவ ராமர்க்கு’ ஈடுயார்?

‘மூன்று சக்கரச் சைக்கிளாம் தேரிலே’
மூலை முடுக்குகள் யாவும் நிதம் சென்று,
ஆன்றோர் தொட்டு அசடர் வரை நட்பை
ஆண்டு, யார்யா ருக்கோ கரம் தந்து,
சான்றோ னாகவும், ‘நாட்டாமை’ போலவும்,
தமிழடியார்க்குப் ‘பிரம்ம ரிஷி’யாயும்,
தோன்றி – மறைந்தின்று இருபது ஆண்டுகள்
தொலைந்ததா? ‘ஐயன்’ நினைவுகள் நீறுமா?

‘ஆசான் – மாணவர்’ உறவுக் குதாரணம்
ஆனவர் ‘லிங்கர்’; ஆற்றுப் படுத்தியும்,
பேச வைத்தும், பிரபலம் ஆக்கியும்,
‘பின்னிற்க’…மாணாக்கரோ ‘முன்வைத்து’
தேசம் தேசமாய்க் காவித் திரிந்தனர்!
சேவை செய்தனர் கடைசி வரை; அவர்
பாசம் கண்டவர்… இன்று ‘நூற்றாண்டு
அகவை நாளில்’ பணிந்தஞ் சலிக்கிறோம்!

Posted in கவிதைகள் | Comments Off on மங்கிடாப் புகழாளன்.

பாடம்

ஏறெடுத்துப் பார்க்க எவருமற்று
அன்றொருகால்
பாரதி தன்னுடைய ‘பாட்டைத்’
தினமெழுதிக்
குவித்த படியிருந்தான்!
கொடு வறுமை துரத்திவிட, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

செழுமை மிக்கது எங்களின் தாய் மொழி

Posted in Video | Comments Off on செழுமை மிக்கது எங்களின் தாய் மொழி

‘அன்னதானக் கந்தன்’ அற்புதம்

ஆற்றங்கரை யோரம் ‘நர சமுத்திரம்’ திரண்டது.
அதன் அலைகளாய் சனத் தலைகளே அசைந்தது.
ஊற்றுப் பொங்கி ‘சந்நிதியில்’ அருள் மழை பொழிந்தது.
ஊர்களே திரண்டு தேரைக் கண்டு அதில் நனைந்தது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘அன்னதானக் கந்தன்’ அற்புதம்

சந்நிதிப் பாதை

புதிய உலகம் பொருள்பின் அலையும்;
பொருளற் றெளிய பொருள்தன்னை
புகழும்; புளுகிப் புரளும்; அதனில்
பொடியின் அளவே நிதமொட்டும்!
இதனைப் பலரும் புரிவ திலையே,
இதயக் கருணை யுடன் யார்க்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சந்நிதிப் பாதை

கனவுக் கவி !

கவிதை என்பது கனவு போன்றது!
கனவு ஆயிரம் கவின் அருள்வது,
எவரின் ஏக்கமும் தணிய வைப்பது,
இடிகள் தம்மையும் பொடிகள் செய்வது,
தவிக்கும் வாய்களில் அமுதருள்வது,
தடைகள் யாவையும் தகர வைப்பது, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கனவுக் கவி !

பார்த்துச் சிலிர்த்தருள்வான்.

கண்திறந்து தன்அடியார் காட்டுகிற பக்தியினைத்,
துன்பம் சுமந்து
தொடர்ந்து செய்யும் நேர்த்திகளைப்,
பார்த்துச் சிலிர்த்தருள்வான்…
பார்போற்றும் நல்லூரான்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பார்த்துச் சிலிர்த்தருள்வான்.