வாழ்வின் கேள்விகள்

பாதை நூறு கண்களின் முன் விரிந்து உள்ளது. -அதில்
பயணம் எதால் போகவேணும்? மனம் மயங்குது.
மாதிரியாய் வாழ்ந்தவரை மனது தேடுது – சென்று
வாழ்வமோ? யாம் மாய்வமோ? யார் யாரைக் கேட்பது?

எங்கள் பாதை என்ன என்று நாமா கண்டனம்? – அது
எங்கு போகும்? எப்ப சேர்க்கும்? யார் அறிந்தனம்?
எங்கள் முன்பு யாவர்? என்ன வாகனம் வரும்? – அவை
ஏற்றிடுமோ? ஏற்றிடாதோ? யார் தெளிந்தனம்?

என்ன ஆகும் அடுத்தகணம் என்றுணர்ந்திடோம்- நாளை
எம் பயணம் பற்றி யாம் எதிர்வு கூறிடோம்.
முன் நடந்தோர் சொன்ன சொல் மறந்து போகிறோம்- பாதை
முடியுமட்டும் பயணஞ் செய்வமோ? அறிந்திடோம்!

ஒவ்வொருவர் பாதை வேறு, பயணம் வேறுதான். -நாங்கள்
ஒவ்வொருவர் செல்லும் வேகம், தூரம் வேறுதான்.
ஒவ்வொருவர் சகபயணி, வண்டி வேறுதான் – சென்று
ஓயுமட்டும் எது நடக்கும்? கேள்வி நீளுந் தான்!

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் கேள்விகள்

ஆகும் ஊழும் போகும் ஊழும்

கடந்துகொண் டிருக்கின்ற
ஒவ்வொரு கணங்களிலும்
நடக்கவேண்டிய தென்னென்று
நம்விதியோ… தலையெழுத்தோ…
காலமோ… நேரமோ…
கடவுளோ…வினைப்பயனோ…
தீர்மானஞ் செய்கிறது!
இக்கணத்தில் எனக்கென்ன
நடக்குமென்றும்,
உனக்கும் இவன் அவன் எவனுக்கும்
நடப்பது எது என்றும்
நாமுரைத்தல் சாத்தியமோ?
அந்தக் கணத்தில் அவரவரின் ‘பிராப்தத்தில்’
வந்த தெதுவோ
அதுதான் நடந்தேறும்!
அந்த ஒரு கணம்போற்தான்
வாழ்க்கையின் ஒவ்வொரு
விந்தைக் கணமும்
விடுகதைபோல், ஒருபுதிர்போல்,
யாரும் அவிழ்க்க முடியா முடிச்சுப்போற்
தானே தொடரும்?
இந்தக் கணத்தினிலே
எனக்குவெற்றி தோன்றிடலாம்.
உனக்குத் தோல்வியாகிடலாம்.
எனக்கு இலாபம் வந்திடலாம்.
உனக்கு நட்டம் ஏற்படலாம்.
நான் தப்பிப் பிழைத்திடலாம்.
நீ சிக்கிச் சிதைந்திடலாம்.
நான் மாண்டே போயிடலாம்.
நீ மீண்டும் உயிர்த்திடலாம்.
கடந்துகொண் டிருக்கின்ற ஒவ்வொரு கணங்களிலும்
நடக்கும் எது என்றும்,
அடுத்த நொடி என்ன
நடந்துவிடும் என்றும்,
நாம் ஏதும் தீர்க்கமாக
முடிவுசொல்ல முடியாது!
நினைத்தது நடக்குதென்றால்,
திட்டமிட்ட வாறு செயல்நடந்து முடியுதென்றால்,
கிட்டநின்று விதி, காலம் வாழ்த்துதென்றும்…
நினைத்தது
கிட்டவில்லை என்றால்,
கெட்டித் தனமாகத்
திட்டமிட்ட வாறு செயல் நடக்க வில்லையென்றால்
எட்டநின்று விதி, காலம் எதிர்க்குதென்றும்…. தான்அர்த்தம்!
நினைத்ததெல்லாம் நடந்ததொரு நேரம்;
அதற்கெதிராய்
நினைத்ததெதும் நடவாத நிஜம்
காலை வாரிவிடும்
நேரம்; இரண்டினையும்
நேரே நாம் கண்டுள்ளோம்!
நாமும் அனுபவித்தோம்;
பிறரும் அனுபவிக்கப்
பார்த்துள்ளோம்;
‘ஆகும் ஊழ் போகும் ஊழ்’
என இதனைக்
கூறும் மறை;
‘மெய்யை’ யார் கண்டு தெளிகின்றோம்?

Posted in கவிதைகள் | Comments Off on ஆகும் ஊழும் போகும் ஊழும்

செய்…வா!

ஆயிரம் தடைகள் சூழ்ந்து
அடக்கிடும் போதும்…நூறு
ஆயிரம் இடர்கள் சீண்டி
அழித்திட முயலும் போதும்…
பாய்ந்ததை எதிர்க்கும் நெஞ்சும்,
பயப்படாக் கை, கால், கண்ணும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on செய்…வா!

இயற்கை நியதி

தெருவெலாம் துன்பம் திரளுது எனினும்
திசைகளிற் பூத்தன மலர்கள்.
தினந்தினம் வெய்யில் தீய்த்திடும் போதும்
செடிகளில் தோன்றின தளிர்கள்.
பெருமழை வெள்ளம் மூழ்கடித் தாலும்
பின் எழும் புதுப்புதுப் பயிர்கள். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நியதி

புறம்போல் அகமில்லை.

மனிதர்கள் மனிதர்களாய் இல்லை
இந்த நாட்களிலே!
மனிதர்கள், சராசரி
மனிதக் குணங்களுடன்
புறத்திலும் அகத்திலும்
புதிர்ப்போலி வேசங்கள் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புறம்போல் அகமில்லை.

இடர் மேலாண்மை

‘முன்னாயத் தம்’ என்று முறைக்கு முறைகதைத்து,
என்னென் றியற்கையிட- ரிருந்துதப்புவ தென்றாய்ந்து,
என்னென் றனர்த்தத்தைத் தணிப்பதெனத் திட்டமிட்டு,
என்னென் றிடர்க்குமுகம் கொடுப்பதெனக் கற்பித்து,
ஊரினைக் காப்பதற்கு ஒத்திகை களும்பார்த்து,
ஆயிரம் கதையளந்து, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இடர் மேலாண்மை

திக்(வா) விஜயம்

“அழிவு எங்கெங்கும் அழிவுகள்” என்றுதான்
அங்கும் இங்குமே செய்திகள் பேசின.
அழிவு, மரணங்கள் என்று அடிக்கடி
அன்று… போரிடை வந்திட்ட செய்திகள்
முழுதும் ஓய்ந்து அப்பப்போ அங்கங்கு
மோதல், விபத்து, வாள் வெட்டுகள்,போதையால் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on திக்(வா) விஜயம்

‘விலான கம’, ரம்புக்கணை.

உறங்கிக் கிடந்தது ஊர்;
நேற்று மட்டுமல்ல
பரம்பரை பரம்பரையாய் வசித்து
மகிழ்ந்துயிர்த்த
ஊரது;
நிம்மதியாய் உண்டு களித்துறங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘விலான கம’, ரம்புக்கணை.

பாடம்

இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது.
இயற்கையை அடக்க
எவராலும் இயலாது.
இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஏலாது.
இயற்கை ஏன் மாறுதென்று
எவரும் கேட்கலாகாது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

காலக் குருதி

காலமோ நிற்காமல் கணம்கணமும் தொடர்ந்து
ஓடிக்கொண் டிருக்கும் உயிர்க்குருதி!
எப்படித்தான்
குருதி உடலுள் சுழன்றோட
உயிர்துடித்து
இருக்குமோ…அப்படி இக்காலக் குருதி ஓட… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலக் குருதி

நேருவோம்

வாடிக் கிடக்கும் நிலமெலாம் – மழை
வார்த்து மகிழ்ந்தது வான்முகில் -துணை
தேடித் தவிக்கும் உயிர்க்கெலாம்- சுகம்
சேர்த்துப் பொழிந்தது பொன்மழை -அனல்
கூடி எரித்த சிதைகளும் – நூர்ந்து
கொள்ளவே…ஆறிற்று தாய்மடி -உயிர் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நேருவோம்

சிவனுக்கு விண்ணப்பம்.

‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த
மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன்
ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து
அற்புதம் செய்பவரோ சில பேர்களே!
ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு
ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சிவனுக்கு விண்ணப்பம்.

எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

தேனாறு பாயாத போதும்,
தினந்தினமும்
பாலாறு பாயாத போதும்,
எம் நிலம் சிரிக்கும்.
சாவைத் துரத்திச் சரித்து
நம் திசையெங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

யாழ்ப்பாண இடம்பெயர்வு

கவிஞர் ஜெயசீலனின் பிரியாவிடைக் காவியம் நெடுங்கவிதை ஆற்றுகை. அளிக்கை செய்வோர் பரதன் , பார்த்தீபன் ,வேந்தன் , தேவானந்த் 1995 ஒக்ரோபர் யாழ்ப்பா இடம்பெயர்வைப் பேசும் கவிதை நன்றி -நிகழ்Tv
Posted in Video | Comments Off on யாழ்ப்பாண இடம்பெயர்வு

வருவார்கள்…அவனும் வருவான்!

“எனக்குத்தான் எல்லாமும் தெரியும்
பிறர்பற்றி
எனக்கென்ன?
அவர்க்கு என்ன தெரியும்” என்ற
அலட்சியமும்,
அபரிமித ஆற்றல் பலம் திறனும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வருவார்கள்…அவனும் வருவான்!