சிவனுக்கு விண்ணப்பம்.

‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த
மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன்
ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து
அற்புதம் செய்பவரோ சில பேர்களே!
ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு
ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து
யாவர்க்கும் தீமை செய்து – ஆண்டு
அழிவுகள் செய்வோர் பல்லாயிரம் பேர்களே!

“என்ன இது கொடுமை – நன்மை
இங்கு நிலைத்திட நாலும் புரிந்திடும்
மன்னர்க்கு இல்லை இடம் –
மண்ணை
வாட்டி வதைப்போர்க்கு நீள்கிறதே தடம்”
என்ற வரலாறு – இன்றும்
எங்கும் அரங்கேறும்; தீயர்க்குத் தான் காலம்.
தன்பணி செய்யும் எமன் – தனை
தடுக்க முடியாது; இது எங்களின் சாபம்!

‘மார்க்கண்டர்’ நீண்ட காலம் – இந்த
மண்ணினில் வாழ்ந்துயிர் காத்திடவே
ஆசைகள் கொண்டு நேர்ந்தால் -சிவன்
அன்றுபோல் வந்தெமன் தன்னை வீழ்த்தி,
பூமியில் சாவை ஓட்டி, – பாரம்
கூட்டிப், புவி சுற்றிடாது நிற்க
நாசங்கள் பண்ணிடலாம் -ஆக
நன்மைக்குக் காலங்கள் இன்றும் இல்லையடா!

அவரவர் சாவு என்றோ -எங்கோ
அறுதி, உறுதியாய்த் தீர்மானமாய்,
தவறாமலே நிகழும் – எமன்
தன் கடன் செய்வான்; தடுத்திடலும் பாவம்.
சிவனுக்கொரு விண்ணப்பம் – ‘இயம
சங்காரம்’ செய்யாமல் தீயவரின் குணத்,
தவறைத் திருத்தி மாற்றும் – ‘மார்க்
கண்டரையுங்’ காக்கத் தாரும் ஐயா வரம்!

Posted in கவிதைகள் | Comments Off on சிவனுக்கு விண்ணப்பம்.

எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

தேனாறு பாயாத போதும்,
தினந்தினமும்
பாலாறு பாயாத போதும்,
எம் நிலம் சிரிக்கும்.
சாவைத் துரத்திச் சரித்து
நம் திசையெங்கும்
மேவிக் கிடக்கின்ற மிகுவளங்கள்
எம்வாழ்வின்
தேவைகளைத் தீர்க்கச் சேர்ந்து பெருகிவரும்.
எங்கும் பரந்த எழில்வயல்கள்,
தோட்டங்கள்,
தங்கு தடையின்றித் தந்தருளும் செல்வத்தை.
பூமரங்கள் பூக்கும்.
பொலியும் பழவகைகள்.
ஆழக் கடலெங்கும் அமுதம் திரண்டுவரும்.
வானம் ஒழுங்காய் வரமருளும்.
கோடையுடன்
மாரி… பெருகாதும் குறையாதும் வந்துபோகும்.
சின்னத் துளிவிழுந்தால்…
சிலிர்த்து வரண்ட நிலம்
புன்னகைக்கும்.
பசுமைபூசிப் புரக்கும்.
ஆவினமும்,
கால்நடையும், பட்சி பறவைகளும்,
கைகொடுத்தெம்
வாழ்வுக் குதவும்.
மாய்ந்து களைத்துழைக்கும்
தோள்களினால்…
இம்மண் சோம்பல் இலாதொளிரும்.
அறிந்த தொழில்கள்,
அதில் நிபுணத் துவங்கள்
நிறைந்தவரால்…செயல்கள் நிமிரும்.
வற்றாத
ஆழக் கிணற்றுநீர் அமுதம்
உயிர் ஈரம்
காயாது காக்கும்.
எங்கள் கலை வகைகள்,
கோவில் குளங்கள் குதூகலத்தைப் பறைசாற்றும்.
கூடப் பிறந்த குணம்,
இயல்பு, கொண்டாட்டம்,
சாப்பாடு, சடங்கு, சம்பிரதாயம்,
இன்று
மூப்படைந்தும் இன்னும் முடிவுறாத நம்பிக்கை,
யாவும் எம் தனித்துவத்தை
யாவருக்கும் பறைசாற்றும்.
எங்கள் விழுமியங்கள், இயல்பு,
அடையாளம்,
எங்களது பாரம் பரியம், மரபுரிமை,
எங்கள் பழக்க வழக்கம்,
எம் பண்பாடு,
எங்களது வாழ்நிலத்தில்
எங்களது வாழ்வுரிமை,
எங்கள் சமூக நோக்கு,
எங்கள் வரலாறு,
எங்களது கொற்றம்,
எம்முகத்தை நிரூபிக்கும்.
நாகரிகம், புதுமை, நவீனம்,
என எதும்…நம்
கோலம் கலைக்கக் குறிவைத்து வந்தாலும்…
எமக்குள்ளே சாகாது கிடந்தியக்கும்
எம்பண்பு
எம்மை உயிர்ப்பிக்கும்.
எந்த அந்நியம் புகுந்து
எம்மை விழுங்க முயன்றாலும்
இவை…நாங்கள்
முகமிழந்து போகாமல்,
முற்றாய் அதில் கரைந்து
மிக நலிந்தும் வீழாமல்,
எமை மீட்டுக் காத்தருளும்!

Posted in கவிதைகள் | Comments Off on எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

யாழ்ப்பாண இடம்பெயர்வு

கவிஞர் ஜெயசீலனின் பிரியாவிடைக் காவியம் நெடுங்கவிதை ஆற்றுகை. அளிக்கை செய்வோர் பரதன் , பார்த்தீபன் ,வேந்தன் , தேவானந்த் 1995 ஒக்ரோபர் யாழ்ப்பா இடம்பெயர்வைப் பேசும் கவிதை நன்றி -நிகழ்Tv
Posted in Video | Comments Off on யாழ்ப்பாண இடம்பெயர்வு

வருவார்கள்…அவனும் வருவான்!

“எனக்குத்தான் எல்லாமும் தெரியும்
பிறர்பற்றி
எனக்கென்ன?
அவர்க்கு என்ன தெரியும்” என்ற
அலட்சியமும்,
அபரிமித ஆற்றல் பலம் திறனும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வருவார்கள்…அவனும் வருவான்!

கம்பனாம் காலக் கவி

அழகான பாக்கள் அதிலே கனாக்கள்
அடி ஆழமுள்ள உனதாற்றில்…
விளையாட எண்ணி விழிகள் பிதுங்கி
மிதவா தமிழ்ந்தேன் நினதேட்டில்.
களமாடல், காதல், கடல் தாண்டி மோதல்,
கருவாய் மிளிர்ந்த கவிமேட்டில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கம்பனாம் காலக் கவி

தீப வலி

ஓர் அசுரன்…
இந்த உலகை வதைத்தவன்…தன்
கோரச் செயலுணர்ந்து,
கொடுமைக்குத் தண்டனையாய்
ஊர்தனது சாவை
உளம்மகிழ்ந்து கொண்டாட Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தீப வலி

இருண்மையும் ஒளியும்.

இரவின் அடர்ந்த இருட்டுக்குள்த் தானே
உருவாச்சு கிழக்கில் ஒளியின்
முதற்துளியும்?
அந்த ஒளி ‘நுகத்தை’ ஆக்கியே விட்ட ‘சூல்’
‘விந்து’ எவையெவைகள்
புணரப் பிறந்ததென்ற Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இருண்மையும் ஒளியும்.

சகலகலா சக்தி!

‘சகல கலாவல்லி’, சக்தி, அவளின்
புகழினைப் போற்றும் பொழுதில் – அகங்கள்
குளிரும்; உடலில் குதூகலம் பொங்கும்;
விழிகசியும்; பக்தி மிகும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சகலகலா சக்தி!

முத்தேவியர் புகழ் பாடு.

சிங்கத்தில் வந்தே திசைகாக்கும் ‘துர்க்கை’யவள்
பொங்குகிற வீரத்தைப் போர்த்திறணை -எங்களுக்குத்
தந்தருள்வாள்; சூழும் தடையுடைத்தும் வெல்லவைப்பாள்;
வந்தனைகள் செய்;வா மகிழ்ந்து. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on முத்தேவியர் புகழ் பாடு.

இரவும் ஒரு இறையே!

பெளர்ணமிக்கு ஓரிரு நாட்கள் இருக்கிறது.
கெளவிற்று இரவுப் பறவை
பகற்பழத்தை.
முக்கால் வாசி முட்டை மஞ்சட் கருவாக
நிற்கிறது பொன்நிலவு
எனது தலைக்குமேல். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இரவும் ஒரு இறையே!

கேட்போம் கொடுப்பர்!

அன்னை எனும்சக்தி மூன்று
வடிவெடுக்க அன்னவரை
நின்றும் கிடந்தும் நினைந்து வணங்கி நெகிழ்ந்துருகி
“என்ன கலை செல்வம் வீரம் இருக்கிறதோ எல்லாமும்
குன்றாமற் தாரு”மென்று கேட்போம்; கொடுப்பராம்… கொள்வோமே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கேட்போம் கொடுப்பர்!

வேண்டித் துதி செய்

Posted in Video | Comments Off on வேண்டித் துதி செய்

வேண்டித் துதிசெய்.

கலையாத கல்வியும், கரையாத செல்வமும்,
கனல்கின்ற வீரமதுவும்,
கருகாது வாழ்வினைக் களித்தோங்க வைப்பவை;
கவின் சூழ வரந் தாறவை;
உலகத்தில் உன்பேரை உயர்தாள வைப்பவை;
உடன் தேட… ‘சக்தி’ களினை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேண்டித் துதிசெய்.

“தங்களாலேனும் கிடைக்குமா” என்று

உன் துவக்கின் தோட்டாவோ,
உன் கரத்தின் தடி பொல்லோ,
அன்றவனைச் சாய்க்க…
அள்ளி எடுத்துவந்து;
மாரி பொழிந்துமே வாரடித் தோடியதால்
ஈரஞ் சுவறி இருந்த Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on “தங்களாலேனும் கிடைக்குமா” என்று

மங்கிடாப் புகழாளன்.

எங்களின் குருவாயும், “இது திசை”
என்று ரைத்த ‘கலங்கரை’ யாகவும்,
சங்கை மிக்க ‘யாழ் இந்து’ ஆசான்களில்
தனித்தொளிர்ந்த ‘பிதாமக னாகவும்’,
சிங்கமாகக் கால் பழுதுபட் டாலும்… உள்ச்
சீற்றம் குறையாது ‘வாழ்ந்து… உயர்ந்த’ நம்
‘மங்கிடாப் புகழாளன்’ ‘சிவராம-
லிங்கம்’ மாஸ்ரரை.. நெஞ்சால் வணங்குவோம்!

கற்ற கல்வியால் பெற்ற கம்பீரமும்,
கலை மொழி தேர்ந்து கொண்ட மிடுக்கதும்,
மற்ற வர்க ளிற்காய்த் தன் இயலாமை
மறைத்து… உதவிடும் ஈகைக்குணம் பண்பும்,
உற்ற துன்பம் பொறுத்து… ஊர் உலகிற்
குழைத்தும் தன்நலம் எண்ணாத் தியாகமும்,
நற்றமிழ் சைவம் பேசி அறம் சொல்லுஞ்
ஞானமும், கொள் ‘சிவ ராமர்க்கு’ ஈடுயார்?

‘மூன்று சக்கரச் சைக்கிளாம் தேரிலே’
மூலை முடுக்குகள் யாவும் நிதம் சென்று,
ஆன்றோர் தொட்டு அசடர் வரை நட்பை
ஆண்டு, யார்யா ருக்கோ கரம் தந்து,
சான்றோ னாகவும், ‘நாட்டாமை’ போலவும்,
தமிழடியார்க்குப் ‘பிரம்ம ரிஷி’யாயும்,
தோன்றி – மறைந்தின்று இருபது ஆண்டுகள்
தொலைந்ததா? ‘ஐயன்’ நினைவுகள் நீறுமா?

‘ஆசான் – மாணவர்’ உறவுக் குதாரணம்
ஆனவர் ‘லிங்கர்’; ஆற்றுப் படுத்தியும்,
பேச வைத்தும், பிரபலம் ஆக்கியும்,
‘பின்னிற்க’…மாணாக்கரோ ‘முன்வைத்து’
தேசம் தேசமாய்க் காவித் திரிந்தனர்!
சேவை செய்தனர் கடைசி வரை; அவர்
பாசம் கண்டவர்… இன்று ‘நூற்றாண்டு
அகவை நாளில்’ பணிந்தஞ் சலிக்கிறோம்!

Posted in கவிதைகள் | Comments Off on மங்கிடாப் புகழாளன்.