எரிந்த நாள்

எங்கெங்கோ இருந்த எங்களது வேர்களினை
அங்குதேடிச் சேகரித்தோம்.
நம் ‘ஞானப் பெட்டகமாய்’
அமைத்திருந்தோம் அதனை.
ஆவணங்கள், சுவடிகள்
எமது சரிதம் இயம்பிய நூல், பத்திரிகை,
தேடற் கரிய திரவியமாம் ஏட்டுவகை,
ஊர் நல்க…
‘பூதம்- நாம்’ பொக்கிஷமாய்ப் புதையலுமாய்க்
காத்திருந்தோம்.
‘யாழின் கர்வமாக’ பார்த்திருந்தோம்.
தனிமனித முயற்சி
சமூக எழுச்சியாக…
இனத்தின் தனித்துவமாய்,
மொழியின் முகமாய்,
எமது அடையாள ஏற்றமுமாய்க்,
கிடுகிடென்று
நிமிர்ந்ததிவ் அறிவில்லம்!
நிலைத்த நம் ஆன்மாவின்
திமிராய்த் திரண்டது நூற் செல்வம்!
இளையோர்
தொடக்கம் முதியோர் வரை அறிவை வளர்ப்பதற்கும்,
இடையறாது படைப்பாளர்
இலக்கியம் உசாவுதற்கும்,
கலைஞர்கள் தம்தம் கலைமுயற்சி
தொடர்வதற்கும்,
‘பலம் இது- தமிழர்க்கு’ என உலகம் போற்றுதற்கும்,
களமமைத்துத் தந்த ‘கலைக்கோவில்’,
ஈழத்தோர்
உழைப்பால் உயர்ந்த ‘உயிர்க்கொற்றம்’,
தீக்குளித்த
நாளின்று!
‘அடையாள அழிப்பாலே’ அடக்கி
மானம் சுயத்தை
மண்டியிட வைக்க வந்தோர்
தீமூட்ட… அந்த ‘நூற்சிதையில்’
நம் ஆன்மா
தீய்ந்து கருகிய மணம்
மன நாசிகளில்
வீசிடுது இன்றும்!
பொசுங்கியதால் வந்த கோபம்
ஆறவில்லை இன்னும்!
அதன் அழிவு தந்துபோன
பாதிப்பின் பெறுமதிக்குப் பரிகாரம்
கிடைக்கலையே
ஏன் காணும்?
‘எரிந்த சாம்பலில் எழும் பீனிக்ஸ்ப்’
போல…’சரஸ்வதி வீற்றிருக்கும்
வெள்ளைநிறத்
தாமரையைப்’ போல…
மீள மலர்ந்தொளிரும்
‘அதனுடைய’ ஏக்கம் ஆசை
ஈடேற வில்லை வென்றும்!
‘அது’ எரிந்த நாள் நினைவு இரணம்…
ஆறுமா என்றும்?

Posted in கவிதைகள் | Comments Off on எரிந்த நாள்

புயலிடை நின்ற மரங்கள்.

கண்களில் தெரிந்தது கனவதன் கோலம்.
கண்ணீரில் கரைந்தது நனவினில் யாவும்.
புண்களே மிகுந்தன பொன்னுடல் எங்கும்.
பூசவோ மருந்திலை வலிகளே மிஞ்சும்.
பண்களில் மகிழ்ச்சிகள் மலரலை இன்னும்.
பாட்டுகள் ‘திரிந்தன’ அந்நியம் மின்னும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புயலிடை நின்ற மரங்கள்.

மலைத்தோம் கண்டு!

தீந்தமிழின் அடையாளம்,தெய்வச் சொத்து,
‘சிறுவாழ்வின்- பேருண்மை’ பகரும் வேதம்,
வான் மறை,நற் தெய்வ வாக்கு,அடிகள் ரெண்டுள்
வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள்,
மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல், வைய
மாந்தருக்கும் அருமருந்து,அமுது,என்று Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மலைத்தோம் கண்டு!

உயர்வுக்காய்த் துணையும் நல்கு

யாழ்ப்பாணம் இந்துப் பண்ணை
யாம் பெற்ற இரண்டாம் அன்னை!
வாழ்வில் யாம் உயர…லட்சம்
வரம் தந்த தெய்வ அன்னை!
நாளொரு பொழுதாய்.. நாம் அந்
நாயகி மடி தவழ்ந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உயர்வுக்காய்த் துணையும் நல்கு

உன்னைக் காணல்

ஒவ்வொரு வரும் ஒவ்வோர் விதத்தில் உனைக்காண்பர்.
ஒவ்வொரு வரும் ஒவ்வோர் வழியில் உனைக்காண்பர்,
அற்புதப் பதிகங்கள் பாடி உனைக் காண்பர் சிலர.;
கற்பூரச் சட்டியதன் சூட்டில் உனைக் காண்பர் சிலர்.
கண்மல்கி ஆறுகாலப்
பூசைகளில் காண்பர் சிலர். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உன்னைக் காணல்

உனது வெற்றிடம்

கடல் சுதி மீட்டிட, அலை ஜதி போட்டிட,
கவி நூறு பாடி வருவாய்.
கனவினில் கண்டவை நனவினில் கைவரக்
கருவியாய்க் கலையைத் தொடுவாய்.
விடையிலாக் கேள்விகள் மிகமிக அதிகமே…
விளங்கிதை; ஞானம் பெறுவாய். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உனது வெற்றிடம்

கொடுங் கோடை

தீப்பிடித்து எரிகிறது எங்களது பகல்கள்.
ஏப்பம் இடுகிறது அனல்
எட்டுத் திசைகளையும்.
யாரெவரின் பெருமூச்சு அனற்காற்றாய் அடிக்கிறது?
யார் கரித்து இட்ட சாபம் கனலை வளர்க்கிறது?
மண்ணும் மரமும் வனமும் குளம் கடலும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கொடுங் கோடை

அறிதிகொலோ?

காலகால மாக இங்கு வாழும் மெய் உயிர்ப்புகள்,
கல்லை மண்ணை நீரை தீயை காற்றை ஆளும் ஓர் பொருள்,
சூலை – விந்து சேரவே வளர்ந்து வாழுமாம் உயிர்,
சூழும் தாவரத்தில் பூவை – வித்து ஆக்கும் மாதிறண்,
காலிலாதியங்கி வையம் காக்க நிற்கும் சக்திகள்,
கர்மம் தீவினைகளுக்குத் தோன்றும் தண்டனை, இவை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அறிதிகொலோ?

எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.

மனதிலே நிற்கின்ற கவிதையாய் இல்லையே…
மனது தொட்டு வருடியே
மலரென, வாடாத மல்லிகைப் பூவென,
மலரணும் காண்… கவிதையே!
நனவில் நடந்ததைக் கனவில் கிடந்ததை
நவிலணும் சுவை கூட்டியே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.

புலக்கண் இணையத்திற்கு வழங்கிய நேர்காணல்

Posted in Video | Comments Off on புலக்கண் இணையத்திற்கு வழங்கிய நேர்காணல்

கவலை

உதிர்ந்த இலைகள், பூ, கிளைகள், வேர்கள் பற்றிக்
கவலைப் படுவதில்லை காண்…
மரங்கள்; கலைந்த
முகில்களை எண்ணி முறைப்பதில்லை வான்; நிலத்தில்
விழும்துளிகள் பற்றி வினவாது மேகம்; வீழ்ந்து
சிதைந்த அலைகள்பற்றிச் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கவலை

மலைத்தோம் கண்டு

தீந்தமிழின் அடையாளம், தெய்வச் சொத்து,
சிறுவாழ்வின் – பேருண்மை பகரும் வேதம்,
வான் மறை, நற் தெய்வ வாக்கு, அடிகள் ரெண்டுள்
வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள்,
மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல்,
வைய Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மலைத்தோம் கண்டு

புது விதி எழுதிடா!

கண்ணா லுனைக் காண எனக்
கண்ணீருடன் கதறும்…
கையற் றவர் கால ற்றவர்
கதையை மறந்தாயோ?
புண்பட்டவர் நொந்திற்றவர்
புதிரை அவிழ்க்காயோ? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புது விதி எழுதிடா!

அறிக!

பஞ்சம்பசி வந்தும், பாய்ந்து சமர் தின்றும்,
பாறவில்லை மண்ணின் அழகு.
பாறையிடை நன்னீர் ஊறும்; நில ஈரம்
பச்சையுடை போக்குந் தனக்கு.
கொஞ்சும் கடல் செல்வம் கொட்டும்; உயர்வானம்
கொண்டுதரும் சொர்க்க அமுது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அறிக!

யான்

அடிமையாக இருக்கமாட்டேன்; யாரை யேனும்
அடக்கி அடிமையாக்கிடவும் மாட்டேன்; யார்க்கும்
குடிமைசெய்து வாழமாட்டேன்; குட்டக் குட்டக்
குனிந்தேவல் செய்யமாட்டேன்; யாரும் யாரை
அடக்கவந்தால் அதைப்பார்த்தும் இருக்கேன்; எந்தன்
ஆயுதமாய் கவியெடுத்து யுத்தம் செய்வேன். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on யான்