கேட்போம் கொடுப்பர்!

அன்னை எனும்சக்தி மூன்று
வடிவெடுக்க அன்னவரை
நின்றும் கிடந்தும் நினைந்து வணங்கி நெகிழ்ந்துருகி
“என்ன கலை செல்வம் வீரம் இருக்கிறதோ எல்லாமும்
குன்றாமற் தாரு”மென்று கேட்போம்; கொடுப்பராம்… கொள்வோமே!

கல்வி யொடுசெல்வம் வீரம் எனநம் கனவுகளை
வெல்லவைக்கும் ஆற்றல்கள் வேணுமே வாழ்வு விளைந்தெழவே!
இல்லை இதிலொன்று என்றாலும் எஞ்சும் இழப்புகளே!
‘மெல்லியலார்’ மூவ ரிடமும் வரம்கேட்டு வெல்வோமே!

கற்றுயர்ந்தோன் செல்வமும் வீரமும் இல்லாக் களங்களினை
முற்றாய் ஜெயிக்க முடியா…ததுபோல் முறையாக
மற்றவையும்; ஏனைரெண்டும் இல்லாது என்றுமே வாகைசூடி
நிற்கா…தியற்கை நிஜத்தை நினைந்து நிமிர்வோமே!

மும்மூன்று நாட்களும் முப்பெரும் மாதர் முகம்பார்த்து,
எம்மனதின் ஏக்கங்கள் தீர்த்திட ஏங்கி, இசைபொழிந்து,
செம்மை அவல்பொங்கல் சுண்டல் படைத்துச், சிலிர்த்துயிர்த்து
எம்மை இழந்தால்… எமக்கு அருள்வர் இர(ற)ங்கிவந்தே!

வீடுகளிற் பூசை, ‘விஜய தசமி’யன்று வித்தைகற்றல்,
‘ஏடு தொடக்கல்’, நம்நம் தொழிற்கருவி இட்டெடுக்கும்
‘ஆயுத பூஜை’செய்து, ஆழக் கலைகள் அரங்கேற்றிப்
பாடிப் பரவிப் பணிவோம்; வாழ்வில் பயன்பெறவே!

Posted in கவிதைகள் | Comments Off on கேட்போம் கொடுப்பர்!

வேண்டித் துதி செய்

Posted in Video | Comments Off on வேண்டித் துதி செய்

வேண்டித் துதிசெய்.

கலையாத கல்வியும், கரையாத செல்வமும்,
கனல்கின்ற வீரமதுவும்,
கருகாது வாழ்வினைக் களித்தோங்க வைப்பவை;
கவின் சூழ வரந் தாறவை;
உலகத்தில் உன்பேரை உயர்தாள வைப்பவை;
உடன் தேட… ‘சக்தி’ களினை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேண்டித் துதிசெய்.

“தங்களாலேனும் கிடைக்குமா” என்று

உன் துவக்கின் தோட்டாவோ,
உன் கரத்தின் தடி பொல்லோ,
அன்றவனைச் சாய்க்க…
அள்ளி எடுத்துவந்து;
மாரி பொழிந்துமே வாரடித் தோடியதால்
ஈரஞ் சுவறி இருந்த Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on “தங்களாலேனும் கிடைக்குமா” என்று

மங்கிடாப் புகழாளன்.

எங்களின் குருவாயும், “இது திசை”
என்று ரைத்த ‘கலங்கரை’ யாகவும்,
சங்கை மிக்க ‘யாழ் இந்து’ ஆசான்களில்
தனித்தொளிர்ந்த ‘பிதாமக னாகவும்’,
சிங்கமாகக் கால் பழுதுபட் டாலும்… உள்ச்
சீற்றம் குறையாது ‘வாழ்ந்து… உயர்ந்த’ நம்
‘மங்கிடாப் புகழாளன்’ ‘சிவராம-
லிங்கம்’ மாஸ்ரரை.. நெஞ்சால் வணங்குவோம்!

கற்ற கல்வியால் பெற்ற கம்பீரமும்,
கலை மொழி தேர்ந்து கொண்ட மிடுக்கதும்,
மற்ற வர்க ளிற்காய்த் தன் இயலாமை
மறைத்து… உதவிடும் ஈகைக்குணம் பண்பும்,
உற்ற துன்பம் பொறுத்து… ஊர் உலகிற்
குழைத்தும் தன்நலம் எண்ணாத் தியாகமும்,
நற்றமிழ் சைவம் பேசி அறம் சொல்லுஞ்
ஞானமும், கொள் ‘சிவ ராமர்க்கு’ ஈடுயார்?

‘மூன்று சக்கரச் சைக்கிளாம் தேரிலே’
மூலை முடுக்குகள் யாவும் நிதம் சென்று,
ஆன்றோர் தொட்டு அசடர் வரை நட்பை
ஆண்டு, யார்யா ருக்கோ கரம் தந்து,
சான்றோ னாகவும், ‘நாட்டாமை’ போலவும்,
தமிழடியார்க்குப் ‘பிரம்ம ரிஷி’யாயும்,
தோன்றி – மறைந்தின்று இருபது ஆண்டுகள்
தொலைந்ததா? ‘ஐயன்’ நினைவுகள் நீறுமா?

‘ஆசான் – மாணவர்’ உறவுக் குதாரணம்
ஆனவர் ‘லிங்கர்’; ஆற்றுப் படுத்தியும்,
பேச வைத்தும், பிரபலம் ஆக்கியும்,
‘பின்னிற்க’…மாணாக்கரோ ‘முன்வைத்து’
தேசம் தேசமாய்க் காவித் திரிந்தனர்!
சேவை செய்தனர் கடைசி வரை; அவர்
பாசம் கண்டவர்… இன்று ‘நூற்றாண்டு
அகவை நாளில்’ பணிந்தஞ் சலிக்கிறோம்!

Posted in கவிதைகள் | Comments Off on மங்கிடாப் புகழாளன்.

பாடம்

ஏறெடுத்துப் பார்க்க எவருமற்று
அன்றொருகால்
பாரதி தன்னுடைய ‘பாட்டைத்’
தினமெழுதிக்
குவித்த படியிருந்தான்!
கொடு வறுமை துரத்திவிட, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

செழுமை மிக்கது எங்களின் தாய் மொழி

Posted in Video | Comments Off on செழுமை மிக்கது எங்களின் தாய் மொழி

‘அன்னதானக் கந்தன்’ அற்புதம்

ஆற்றங்கரை யோரம் ‘நர சமுத்திரம்’ திரண்டது.
அதன் அலைகளாய் சனத் தலைகளே அசைந்தது.
ஊற்றுப் பொங்கி ‘சந்நிதியில்’ அருள் மழை பொழிந்தது.
ஊர்களே திரண்டு தேரைக் கண்டு அதில் நனைந்தது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘அன்னதானக் கந்தன்’ அற்புதம்

சந்நிதிப் பாதை

புதிய உலகம் பொருள்பின் அலையும்;
பொருளற் றெளிய பொருள்தன்னை
புகழும்; புளுகிப் புரளும்; அதனில்
பொடியின் அளவே நிதமொட்டும்!
இதனைப் பலரும் புரிவ திலையே,
இதயக் கருணை யுடன் யார்க்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சந்நிதிப் பாதை

கனவுக் கவி !

கவிதை என்பது கனவு போன்றது!
கனவு ஆயிரம் கவின் அருள்வது,
எவரின் ஏக்கமும் தணிய வைப்பது,
இடிகள் தம்மையும் பொடிகள் செய்வது,
தவிக்கும் வாய்களில் அமுதருள்வது,
தடைகள் யாவையும் தகர வைப்பது, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கனவுக் கவி !

பார்த்துச் சிலிர்த்தருள்வான்.

கண்திறந்து தன்அடியார் காட்டுகிற பக்தியினைத்,
துன்பம் சுமந்து
தொடர்ந்து செய்யும் நேர்த்திகளைப்,
பார்த்துச் சிலிர்த்தருள்வான்…
பார்போற்றும் நல்லூரான்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பார்த்துச் சிலிர்த்தருள்வான்.

திரு நல்லை.

யாழின் தனித்துவம்.
யாழின் பெருமையம்சம்.
யாழின் திமிர், கர்வம்.
யாழ் மரபின் குறியீடு.
யாழ்ச் சைவக் கலாசார வாழ்வின்
அடையாளம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on திரு நல்லை.

வென்று எழ வை!

ஏது பிழை ஏது சரி என்று உரைப்பாயா?
ஏங்கியழும் எம் இதயம் கண்டு களிப்பாயா?
ஆதரவு தந்து எமைத் தொட்டு அணைப்பாயா?
அச்சமொடு ஐயமதும் ஓட அருள்வாயா?
வேதனைகள் சூழ்ந்துவரும் வெட்டி அழிப்பாயா?
வேகும் வரை பார்த்திருந்து மீட்டு எடுப்பாயா? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வென்று எழ வை!

உன்னை விட மாட்டோம்.

நாதமழை வேதமழை நம்கண் மழை யாலே
நாற்திசையும் பக்திபுனல் பாய்ந்து வரும் போதே
வீதிகளில் வீழ்ந்தடியார் சொல்லும் குறை நூறே!
மேவியவை தீர்த்தருள தேரில் எழு வாயே!
சோதனைகள் ஆயிரமாய்ச் சூழ்ந்துவரும் காலம்
தோன்றும் திருநாளில் பதில் பெற்றுத் தர வேணும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உன்னை விட மாட்டோம்.

தமிழின் தலைவன் முருகன்

(தனன தனன தனன தனன
தனன தனன தன தான….சந்தம்)

எனது மனதில் ‘பதி- வை’… ‘கவி-தை’;
இரவும் பகலும் அதைநானும்…
எழுதி உலகும் வியக்கும் வகையில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தமிழின் தலைவன் முருகன்