கொடுங் கோடை

தீப்பிடித்து எரிகிறது எங்களது பகல்கள்.
ஏப்பம் இடுகிறது அனல்
எட்டுத் திசைகளையும்.
யாரெவரின் பெருமூச்சு அனற்காற்றாய் அடிக்கிறது?
யார் கரித்து இட்ட சாபம் கனலை வளர்க்கிறது?
மண்ணும் மரமும் வனமும் குளம் கடலும்
விண்ணும் கருக..
எரிந்த மணம் காற்றினிலே
எங்கும் அலைகிறது!
எண்ணங்களும் பொரிந்து,
அங்கங்கள் அவிந்து, அடங்கி
“ஒரு நிழல் கிடைப்ப
தெங்கே” எனநாங்கள் ஏங்கித் திரிகின்றோம்!
நாதொங்கி வேர்வை வீணீராய்
ஒழுக நாய்கள்
கோபத்தோ டுறுமிக் குலைத்து அலைந்துளன!
விசர்பிடிக்கக் கூடும் விலங்குகட்கு
என்ற ஒரு
உசாரில் உலவிடுது ஊர்.
இந்தக் கொடும் வெக்கை
எம்நிலத்தைப் பாலைவனம் ஆக்கிடுதோ?
மரம் தறித்து
எம்நிலத்தில் பாலைசெய்தோம்…
இதால் வெம்மை இடைஞ்சலின்றி
வந்துகுந்தி எம்மை வதைக்கிறதோ?
அறியாமல்
வெந்து கருகுகிறோம்!
வியர்வை நதி யாவரிலும்
சிந்தி மறுகணமே சிதறி
ஆவியாகிவிட…
நிற்கும் மரக்குடைகள்
கிளைக்கம்பி முறிந்து தொங்க…
கற்கள் தரை கொதிக்க…
கால்வைக்க முடியாது
உயிரைத் துளித்துளியாய் உறுஞ்சும்
இந்தக் கோடையிலே
மயிர்பொசுங்க நிற்கின்றோம்!
மாய்வோமா பிழைப்போமா?
பயிர்பச்சை காப்போமா?
பஸ்ப்பமாகிப் போவோமா?
குயில் குருகைக் காப்போமா?
குத்தி முறிகின்றோம்!
வாழ்விலும் வறுபட்டு
வரும் கோடையும் வறுக்க
வாழ்வும் கருக
வாடிக் கிடக்கின்றோம்!

Posted in கவிதைகள் | Comments Off on கொடுங் கோடை

அறிதிகொலோ?

காலகால மாக இங்கு வாழும் மெய் உயிர்ப்புகள்,
கல்லை மண்ணை நீரை தீயை காற்றை ஆளும் ஓர் பொருள்,
சூலை – விந்து சேரவே வளர்ந்து வாழுமாம் உயிர்,
சூழும் தாவரத்தில் பூவை – வித்து ஆக்கும் மாதிறண்,
காலிலாதியங்கி வையம் காக்க நிற்கும் சக்திகள்,
கர்மம் தீவினைகளுக்குத் தோன்றும் தண்டனை, இவை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அறிதிகொலோ?

எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.

மனதிலே நிற்கின்ற கவிதையாய் இல்லையே…
மனது தொட்டு வருடியே
மலரென, வாடாத மல்லிகைப் பூவென,
மலரணும் காண்… கவிதையே!
நனவில் நடந்ததைக் கனவில் கிடந்ததை
நவிலணும் சுவை கூட்டியே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.

புலக்கண் இணையத்திற்கு வழங்கிய நேர்காணல்

Posted in Video | Comments Off on புலக்கண் இணையத்திற்கு வழங்கிய நேர்காணல்

கவலை

உதிர்ந்த இலைகள், பூ, கிளைகள், வேர்கள் பற்றிக்
கவலைப் படுவதில்லை காண்…
மரங்கள்; கலைந்த
முகில்களை எண்ணி முறைப்பதில்லை வான்; நிலத்தில்
விழும்துளிகள் பற்றி வினவாது மேகம்; வீழ்ந்து
சிதைந்த அலைகள்பற்றிச் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கவலை

மலைத்தோம் கண்டு

தீந்தமிழின் அடையாளம், தெய்வச் சொத்து,
சிறுவாழ்வின் – பேருண்மை பகரும் வேதம்,
வான் மறை, நற் தெய்வ வாக்கு, அடிகள் ரெண்டுள்
வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள்,
மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல்,
வைய Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மலைத்தோம் கண்டு

புது விதி எழுதிடா!

கண்ணா லுனைக் காண எனக்
கண்ணீருடன் கதறும்…
கையற் றவர் கால ற்றவர்
கதையை மறந்தாயோ?
புண்பட்டவர் நொந்திற்றவர்
புதிரை அவிழ்க்காயோ? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புது விதி எழுதிடா!

அறிக!

பஞ்சம்பசி வந்தும், பாய்ந்து சமர் தின்றும்,
பாறவில்லை மண்ணின் அழகு.
பாறையிடை நன்னீர் ஊறும்; நில ஈரம்
பச்சையுடை போக்குந் தனக்கு.
கொஞ்சும் கடல் செல்வம் கொட்டும்; உயர்வானம்
கொண்டுதரும் சொர்க்க அமுது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அறிக!

யான்

அடிமையாக இருக்கமாட்டேன்; யாரை யேனும்
அடக்கி அடிமையாக்கிடவும் மாட்டேன்; யார்க்கும்
குடிமைசெய்து வாழமாட்டேன்; குட்டக் குட்டக்
குனிந்தேவல் செய்யமாட்டேன்; யாரும் யாரை
அடக்கவந்தால் அதைப்பார்த்தும் இருக்கேன்; எந்தன்
ஆயுதமாய் கவியெடுத்து யுத்தம் செய்வேன். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on யான்

அக்கப்போர்

தேர்தல் வருகிறது – இந்தத்
தேசம் முழுதும் அடித்துப் புரளுது.
ஊர்கள் கொதிக்கிறது – எங்கும்
உற்சாகம் பீறிட் டொளிர்ந்து பெருகுது.
தேர்தலை வெல்வதற்கு – தத்தம்
திட்டங்கள் கொள்கையைத் தம்பட்டம் தட்டி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அக்கப்போர்

ஒரே காற்று

வீசியது ஒரே காற்று;
எமக்குமேல் சுழன்றடித்து
வீசிற்று ஒரே காற்று;
அவன்மீது அது அள்ளித்
தூவிற்று பூக்களை, சுகந்தம், மகரந்தத்தை.
தூவிற்று என்மீது தூசியை, மணல் மழையை. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஒரே காற்று

புயலை எதிர்வுகூறல்

எதைநாங்கள் எதிர்வு கூறி இருந்தாலும்
அதுஎன்ன எண்ணி,
அது என்ன முடிவெடுத்து,
எந்த வழியில் இயங்க நினைக்கிறது
என்பதைநாம் முழுதாய் அறிய இயலாது.
எதிர்வு நாம் கூறியதில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புயலை எதிர்வுகூறல்

இந்த இரவு

இந்த இரவு வழமையான இரவல்ல!
இந்த இரவு…
இடைவிடாத மழைப்பொழிவை,
இந்த இரவு…
எங்கும் வெள்ளக்காட்டை,
இந்த இரவு… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இந்த இரவு

திருவெம்பாச் சொர்க்கம்

காலையைப் பனி கட்டிப் பிடித்துமே
கருணை யற்று உறைந்திட வைத்திடும்
வேளை; பிரம்ம மூர்த்தத்தின் பின்னான
வேளை; நடுங்கக் குளித்துச் சிவசின்னம்
சூடி… காற்று, சாரல், இருள், கூதல்
சூழவே கோவில் செல்வோம்! அதி காலைப் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on திருவெம்பாச் சொர்க்கம்

பொங்குகிறோம் இம்முறையும்!

பொங்குகிறோம் இம்முறையும்! புதிய பானை,
புத்தரிசி, புதுப்பால், சற்கரை, தேன், நெய்யும்,
மங்கலமாய்க் கோலமும், தோரணமும், இஞ்சி
மஞ்சள் மா இலை, பழங்கள், கொண்டு…மீண்டும்
பொங்குகிறோம்! நீராடி, புனிதம் சூட்டி,
பானையேற்றி, பால் பொங்கும் வரை தீ மூட்டி, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பொங்குகிறோம் இம்முறையும்!