இயற்கை நியதி

தெருவெலாம் துன்பம் திரளுது எனினும்
திசைகளிற் பூத்தன மலர்கள்.
தினந்தினம் வெய்யில் தீய்த்திடும் போதும்
செடிகளில் தோன்றின தளிர்கள்.
பெருமழை வெள்ளம் மூழ்கடித் தாலும்
பின் எழும் புதுப்புதுப் பயிர்கள்.
பிணியொடு சாவு சிதைக்கவும்…தோன்றிப்
பெருகுது நிதம் பல உயிர்கள்.

இயற்கையில்…இன்பம், இடையிடை துன்பம்,
இரண்டுமே வருவது வழமை.
இதனுளும் சோரா தெழவைத்து உலகை
இயக்குவதால் வந்த செழுமை
வியப்பினை ஊட்டும்; இதற்குளே வீழ்ந்தோர்
விழ…தொடர்ந்தோடிடும் இளமை…
வெகு சிறப்பாக நவீனமுஞ் சேர்த்து
விளைவிக்கும் சூழலில் முழுமை!

எத்தனை பேர்தான் இறந்தனர்? அன்னார்
இதயத்தின் சிந்தனை ஊற்றும்,
எரிந்தும் புதைந்தும் தொலைந்திடும் போதும்
எப்படி வளர்ச்சியின் தோற்றம்
நித்தமும் பெருகும்? இதுவியப் பாகும்;
நிர்ணயம் செய்வதார்…ஏற்றம்?
நிச்சயம் ‘இயற்கை நியதி’யொன் றுண்டு
நீதி வழி செயும் மாற்றம்!

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நியதி

புறம்போல் அகமில்லை.

மனிதர்கள் மனிதர்களாய் இல்லை
இந்த நாட்களிலே!
மனிதர்கள், சராசரி
மனிதக் குணங்களுடன்
புறத்திலும் அகத்திலும்
புதிர்ப்போலி வேசங்கள்
நிறைய…
தத்தம் நிறம் குணம் முகம் மறைத்துத்
திரிகின்றார்;
அனேகர் சகுனிகளாய்ச் சிரிக்கின்றார்!
வெறுப்புப், பொறாமை, விசம்,
நெஞ்சிற் கொண்டயலைப்
பிரித்தாண்டு பகைமை பெருகவைத்து
காழ்ப்பு வன்மம்
குறையாமற் பார்த்துக்
குள்ளத் தனம் வளர்த்தார்!
பார்க்கத் தருமராய் பழகச் சகுனியாய்
மூர்க்கக் குணத்தோடே
மோதுகிறார் பலபேர்கள்!
அரிச்சந்திரர், தருமர், அருச்சுனர்,
பல வீமர்,
இராமர், இலட்சுமணர்,
நகுலர், சகாதேவர்,
எனப்புறத்தில் இருப்போரைக் கண்டு
அவர்களது
மனதோ டிணைய முயன்றால்…
அவர்களைப்போல்
இருக்கின்றார் சிலர்குணத்தில்…
எனினும் பலர் அகத்தில்
இருக்கின்றார் இராவணராய்,
இழிக்கின்றார் சகுனிகளாய்,
இருக்கின்றார் துரியோ தனர், துச்சா தனர்களாய்!
மனிதர்கள் மனிதர்களாய் இல்லை
இந்த நாட்களிலே!
மனிதரின் அகத்தின் நிஜம்சொல்லும்
கருவியொன்றை
நனவில்நாம் கண்டறிந்து
அதைக்கொண்டு அகத்திலென்ன
இருக்கென்று இனங்கண்டு
நிசமறியும் வரை…யார்தான்
இராமன் இராவணனென் றறிய முடியாது!
புறம்போல அகமில்லை…
புரிய வேறு வழியேது?

Posted in கவிதைகள் | Comments Off on புறம்போல் அகமில்லை.

இடர் மேலாண்மை

‘முன்னாயத் தம்’ என்று முறைக்கு முறைகதைத்து,
என்னென் றியற்கையிட- ரிருந்துதப்புவ தென்றாய்ந்து,
என்னென் றனர்த்தத்தைத் தணிப்பதெனத் திட்டமிட்டு,
என்னென் றிடர்க்குமுகம் கொடுப்பதெனக் கற்பித்து,
ஊரினைக் காப்பதற்கு ஒத்திகை களும்பார்த்து,
ஆயிரம் கதையளந்து, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இடர் மேலாண்மை

திக்(வா) விஜயம்

“அழிவு எங்கெங்கும் அழிவுகள்” என்றுதான்
அங்கும் இங்குமே செய்திகள் பேசின.
அழிவு, மரணங்கள் என்று அடிக்கடி
அன்று… போரிடை வந்திட்ட செய்திகள்
முழுதும் ஓய்ந்து அப்பப்போ அங்கங்கு
மோதல், விபத்து, வாள் வெட்டுகள்,போதையால் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on திக்(வா) விஜயம்

‘விலான கம’, ரம்புக்கணை.

உறங்கிக் கிடந்தது ஊர்;
நேற்று மட்டுமல்ல
பரம்பரை பரம்பரையாய் வசித்து
மகிழ்ந்துயிர்த்த
ஊரது;
நிம்மதியாய் உண்டு களித்துறங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘விலான கம’, ரம்புக்கணை.

பாடம்

இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது.
இயற்கையை அடக்க
எவராலும் இயலாது.
இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஏலாது.
இயற்கை ஏன் மாறுதென்று
எவரும் கேட்கலாகாது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

காலக் குருதி

காலமோ நிற்காமல் கணம்கணமும் தொடர்ந்து
ஓடிக்கொண் டிருக்கும் உயிர்க்குருதி!
எப்படித்தான்
குருதி உடலுள் சுழன்றோட
உயிர்துடித்து
இருக்குமோ…அப்படி இக்காலக் குருதி ஓட… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலக் குருதி

நேருவோம்

வாடிக் கிடக்கும் நிலமெலாம் – மழை
வார்த்து மகிழ்ந்தது வான்முகில் -துணை
தேடித் தவிக்கும் உயிர்க்கெலாம்- சுகம்
சேர்த்துப் பொழிந்தது பொன்மழை -அனல்
கூடி எரித்த சிதைகளும் – நூர்ந்து
கொள்ளவே…ஆறிற்று தாய்மடி -உயிர் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நேருவோம்

சிவனுக்கு விண்ணப்பம்.

‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த
மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன்
ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து
அற்புதம் செய்பவரோ சில பேர்களே!
ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு
ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சிவனுக்கு விண்ணப்பம்.

எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

தேனாறு பாயாத போதும்,
தினந்தினமும்
பாலாறு பாயாத போதும்,
எம் நிலம் சிரிக்கும்.
சாவைத் துரத்திச் சரித்து
நம் திசையெங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

யாழ்ப்பாண இடம்பெயர்வு

கவிஞர் ஜெயசீலனின் பிரியாவிடைக் காவியம் நெடுங்கவிதை ஆற்றுகை. அளிக்கை செய்வோர் பரதன் , பார்த்தீபன் ,வேந்தன் , தேவானந்த் 1995 ஒக்ரோபர் யாழ்ப்பா இடம்பெயர்வைப் பேசும் கவிதை நன்றி -நிகழ்Tv
Posted in Video | Comments Off on யாழ்ப்பாண இடம்பெயர்வு

வருவார்கள்…அவனும் வருவான்!

“எனக்குத்தான் எல்லாமும் தெரியும்
பிறர்பற்றி
எனக்கென்ன?
அவர்க்கு என்ன தெரியும்” என்ற
அலட்சியமும்,
அபரிமித ஆற்றல் பலம் திறனும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வருவார்கள்…அவனும் வருவான்!

கம்பனாம் காலக் கவி

அழகான பாக்கள் அதிலே கனாக்கள்
அடி ஆழமுள்ள உனதாற்றில்…
விளையாட எண்ணி விழிகள் பிதுங்கி
மிதவா தமிழ்ந்தேன் நினதேட்டில்.
களமாடல், காதல், கடல் தாண்டி மோதல்,
கருவாய் மிளிர்ந்த கவிமேட்டில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கம்பனாம் காலக் கவி

தீப வலி

ஓர் அசுரன்…
இந்த உலகை வதைத்தவன்…தன்
கோரச் செயலுணர்ந்து,
கொடுமைக்குத் தண்டனையாய்
ஊர்தனது சாவை
உளம்மகிழ்ந்து கொண்டாட Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தீப வலி

இருண்மையும் ஒளியும்.

இரவின் அடர்ந்த இருட்டுக்குள்த் தானே
உருவாச்சு கிழக்கில் ஒளியின்
முதற்துளியும்?
அந்த ஒளி ‘நுகத்தை’ ஆக்கியே விட்ட ‘சூல்’
‘விந்து’ எவையெவைகள்
புணரப் பிறந்ததென்ற Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இருண்மையும் ஒளியும்.