துணை நில்

கடலா கியநின் கருணைக் கரையில்
களையா றிடுமோர் கணம்வாய்த் திடுமோ?
உடலா றிடுமோ? உயிரா றிடுமோ?
உணர்வூ றியவா ஒருவார்த் தையுரை!

அழகா… அழியா அருளா ளனுமாய்
அணுகும் பொழுதில் அபயம் தருவோய்.
ஒளியாய் உயிரை ஒளிர்விப் பவனே
உணர்வை நெறிசெய் திடுவாய்…துணைநில்!

எழிலின் தொடுவான் எனவே தெரிவாய்.
இசையின் சுரமாய் பெருகி விரிவாய்.
உழலும் அடியார் உளசஞ் சலமும்
உடனே தொலைய உதவி புரி… வா!

நிதமும் எவரும் நினையா வடிவில்
நிமிரும் நிழலே! நிலம் ஈர் ப்பவனே!
விதியின் சதியை தடுத்தா ளுபவா
விறல்வே லெறிஎம் வினைகொய் திடடா!

உருகி, உனதே எழிலைப் பருகி,
உரையும் குழறி, உணர்வும் இழகி,
வரங்கேட் டழுவோம்; தொடுவாய் வருடி.
மனதில் கணமும் பொழிவாய் அமைதி.

திரு’நல் லை’யதன் திருநாள் களிலே
தெருவில் வரும்செந் தணல்வேல் முருகா!
இருமா தரொடும் இளந்தென் றலென
எழு.. எம் அயலைக் குளிர்வி…இடர் தீர்!

Posted in கவிதைகள் | Comments Off on துணை நில்

உயிர்ப்பின் எழில்

சோடனைகள் விதவிதமாய்ச் சோடனைகள்
வகைவகையாய்ச்
சோடனைகள் என்றாலும் சோபிக்க வில்லைஏதும்!
சோடனைகள் அதனைத் தூக்கி நிறுத்தவில்லை!
ஏனென்றால் சோடிக்கப் பட்டதுவோ
உயிரற்ற
ஓர்சடலம்;
ஆமாம் உயிர்ப்பிலாத ஓர்சடம்;
ஆதலினால்
ஆயிரம் சோடனையும்
அர்த்தம் இழந்ததாச்சு!
வேறுவேறு நிறங்கள்,
விதவித அலங்காரம்,
வெறுமனே கடதாசிப் பூக்களாய்,
எழில் மணம் தேன்
பெறுமதியும் அற்றுப் பிசகிற்று!
உயிர்ப்பிலாத
எதையும் எப்படியும்
எந்நவீனப் பொருள்கொண்டும்
விதவிதமாய்ச் சோடித்தும்
அதன் எழில் விளங்காது!
உயிர்ப்புள்ள, ஜீவன் உணர்வுள்ள,
துடிதுடிக்கும்
உயிருள்ள, சாகா ஒளியுள்ள,
ஒன்றுக்கு…
சோடனைகள், நவீன தோரணங்கள்,
நகை அணிகள்,
மகுடம் கிரீடங்கள் அவசியம் இல்லை!
உயிர்த்
தகைமையை, அழகைத், தளிர்ப்பை,
ஒளிமினுக்கை,
அள்ளிக் கொடுக்கும் ‘அதை’
உலகம் என்றென்றும்
அள்ளி இரசிக்கும்
ஆயுளுக்கும் ஆதரிக்கும்!
இந்த உயிர்ப்பெந்தக் கலைகளுக்கும் தான்பொருத்தம்!
இந்த நிலை இன்றெம்
கவிதைகட்கும் காண்.. பொருந்தும்!

Posted in கவிதைகள் | Comments Off on உயிர்ப்பின் எழில்

விண்ணை உலுக்கும் வினாக்கள்.

இன்னுமின்னும் தோண்ட எத்தனை கூடுகள் வந்திடும்? -அவை
என்ன கொடிய கதைகளை ஊருக் குரைத்திடும்?
என்ன நடந்தது யாரிவர்கள் எனும் ஐயமும், – அட
என்னதான் மூடு மந்திர மென்கிற அச்சமும்,
இன்னும் அவிழாப் புதிராய்த் தொடருதே ஏனடா? -நிதம்
எண்ணிக்கை சொல்லிக் கடந்து நாம் போறமோ? கூறடா! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on விண்ணை உலுக்கும் வினாக்கள்.

சுப்பிரமணி

நடக்கத் தொடங்கையிலே யார்க்கும் இடைஞ்சலில்லை.
இடையில் இணைகையிலே எவரும்
தடுக்கவில்லை.
உடையோன் பின் வந்ததென்று
ஊர் முறையிட்டதில்லை.
நானே உரிமையாளன் எனயாரும் சொன்னதில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சுப்பிரமணி

காக்க முயன்றால்

கலையாத கனவோடு நனவின்று வாழும்.
கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம்.
விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம்
விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காக்க முயன்றால்

இதுவா நேர்வழி?

என்னதான் வசை? எங்கு பார்க்கிலும்
ஏனடா மனக் காழ்ப்புகள்?
ஏன் பொறாமைகள்? போட்டி பூசல்கள்
ஏன் பெருகுது தூற்றுதல்?
நின்று நன்மைகள் செய்பவர்க்குக் கை
நீட்டிக் குற்றம் சுமத்தலேன்? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இதுவா நேர்வழி?

காக்கும் இறை.

எதுவரும் பொழுதிலும், இடர்சுடும் நொடியிலும்,
இடிகளே வீழும் கணமும்.
“எவையுமே தாக்காது எனை”யென் றெனக்குளே
எழும் ஒரு அசரீரியும்.
சதிபல செய்யினும், தருமம் பிழைப்பினும்,
தவிர்த்து…மெய் தனை ஏய்பினும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காக்கும் இறை.

நெஞ்சோடு புலம்பல்.

ஏற்றிட முடியா இந்த
இழப்பினுக் கெதைநாம் செய்வோம்?
கூற்றுவன் கொடுமைக் காரன்…
குணநலம் குறைந்தோன்… கண்டோம்.
நேற்றிந்த நேரம் நின்றோன்…
“இன்றில்லை” என்ற உண்மை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நெஞ்சோடு புலம்பல்.

தீயவர் மாய்வர்.

மாய மந்திர ஜாலம் நிறைந்ததாய்,
மர்மப் பொய்கைகள் சுண்டி இழுப்பதாய்,
மாயைகள் புரி வல்லவர் சூழ்ச்சிகள்
வைத்து மயக்கி விழுத்தத் துடிப்பதாய்,
ஏய்த்து ஏமாற்றி ஆசைகள் காட்டிடும்
எழில்கொள் மோகினிப் பேய்கள் நிறைந்ததாய், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தீயவர் மாய்வர்.

காலத்தோடு ஓடுதல்.

காலமென்பது ஓடுகின்றது.
கால்களும் அதற் கேற்றவாறுதான்
பாலையோ அனற் பாதையோ…அதில்
பாய்ந்துமே பயணித்து உள்ளது.
கால்களில் அடி பட்டிருப்பினும்,
கால்கள் நொண்டவும், ஏதும் நோயினால் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலத்தோடு ஓடுதல்.

உளம் மாற வேண்டும்.

நல்லதிற்குக் காலமில்லை;
நல்ல முயற்சிக்கு,
நல்ல சிந்தனைக்கு,
நல்லதனைச் செய்வதற்கு,
நல்லாரைக் கூடி நடப்பதற்கு,
நாட்டிலுள்ள Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உளம் மாற வேண்டும்.

வேறென்ன வேண்டும்?

சோடனைகள் உச்சமெனத் தோன்றும்
பூஞ் சப்பறத்தில்
ஆரோகணித்து வந்தாள் அன்னை;
புடைசூழ்ந்து
அடியார்கள் கூட்டம் அலைமோத…
நாதவெள்ளம் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேறென்ன வேண்டும்?

பொய்கள் தோற்கும்

பொய்களைக் கண்டு பயந்து – அதைப்
புறஞ் சொல்லுவாரென் றதிர்ந்து.
நைந்து மனங்கள் நலிந்து – ஊரில்
நாலுபேரின் முன் குனிந்து
செய்வதறியாதிருந்து – வாழ்தல்
தீது; இதற்கு மருந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பொய்கள் தோற்கும்

நீதி வெல்லும்.

காலமொன் றிருக்குது.
கடவுள் தீர்ப் பிருக்குது.
வாலையாட்டும் தீமைகள்
மாய்ந்த மெய்யிருக்குது.
போலி வேசம் பொய்மைகள்
போர்க்கு நின்ற போதிலும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நீதி வெல்லும்.

தூயவை துணிந்துவிட்டால்

தூயவை செய்யத் துணிந்திடில்- இடர்
துயர்கள் தொடர்ந்திட மாட்டுதே-
அவை
மாயும் அகலும் வழிவிடும் – என
மா அறிஞர் முன்புரைத்தனர்- அது
நூறு சதவீதம் உண்மையாம் – எண்ணி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தூயவை துணிந்துவிட்டால்