நல்லூர்த் திருவிழா!

அண்டிவரும் பக்தருக்கு அள்ளிஅள்ளியே – செல்வம்
அத்தனையும் தந்துயர்த்தும் அன்னைத் தெய்வமே!
குண்டு, போர், பிணி, அனர்த்தம் சூழ்ந்த போதிலே -நல்ல
குடை, அரணாய்க் காத்தணைத்த நல்லை வேந்தனே!

என்றும் அழியா அழகு கொண்ட வேலவன் -இன்று
என்ன புதுமை உள்ளதோ கொண்டாடும் நாயகன்.
நின்று ஒளியூட்டும் ‘அலங்கார ஆண்டவன்’- நீதி
நியாயம் சொல்லி எம்குலத்தை ஆளும் மன்னவன்.

“எங்கள் பலம், எங்கள் திமிர், எம் மகத்துவம் – அட
எங்கள் கலை, எங்கள் நிமிர்வென்றும் ஆண்டிடும்
சங்கையுடன்” என்பதற்குச் சான்று ஆனவன் – நல்ல
தலைமையற்ற குடிக்கு ‘வாழ்நாள்த் தலைவனானவன்’.

“இவர்கள் நாதியற்றவர்கள்” என்ற எள்ளலை – இங்கு
இவர்கள் ஞானம், செல்வம், வீரம், அற்றோர் என்பதை
எவரும் சொல்ல விடாது.. அவர் வியக்க வைப்பவன் – எங்கள்
இறைமையைத் தன் மகிமையினால் என்றும் காப்பவன்.

எங்கள் அரசனென்று வீதி சுற்றும் கம்பீரம் -நிதம்
எங்களின் இறைவனெனப் பற்றும் தெய்வீகம்
எங்கள் காப்பரண் எனவும் நிற்கும் ஆதாரம் – நல்லை
இருக்குமட்டும் தமிழ்த்தலைக்கு இல்லை சேதாரம்!

எம்பெருமை பாரம்பரியம் வாழ்த்தும் ஒருவிழா! – தமிழ்
இனத்தின், சைவ சமய மகிமை, ஏற்றும் பெருவிழா!
எம் தனித்துவங்கள் போற்றும் கந்தன் கலைவிழா – என்றும்
எம் விழுமியங்கள் காக்கும் நல்லூர்த் திருவிழா!

Posted in கவிதைகள் | Comments Off on நல்லூர்த் திருவிழா!

தேற்றி அருள்புரி.

எல்லையில் லாத எழில்கள் புனைந்து
எப்போதும் புன்னகை பூத்து,
எவரெவர் வந்து இருந்து எழுந்து
இழகி அழும்போதும் பார்த்து,
தொல்லைகள் தீர்த்து, துணிவுளஞ் சேர்த்து,
தோல்விப் பயம் ஓட ஆர்த்து,
சொல்லுவாய் ஞானம் திருவிழா நாளில்;
தூயனே வையகம் காத்து.

நித்தியம் கோடி நிஜ எழில் சூடி
நெருங்கி வருபவன் நீயே!
நெஞ்சினை நீவி, நினைவை வருடி,
நிம்மதி நல்கும் நீ தாயே!
சித்தர்கள் என்றும் சேவிக்கும் கோவே
தீர்ப்பவன் நீ…உயிர் நோயே!
தீர்…வினை; நித்தம் தீர்வினைத் தந்து
தேற்றி அருள் புரிவாயே!

நல்லையின் வேலை நம்பிய யாரும்
நாதிகெட் டோய்ந்தது இல்லை.
நாடியே வந்தோர் நாளும் வரங்கள்,
நன்மை, பெறாததும் இல்லை.
வல்லதோர் சக்தி மலர்ந்திடும் வாசல்
வாழ்வைத் தடுத்ததும் இல்லை.
வஞ்சகர், சூரர், யாரும் அயலில்
வாழ்ந்து சிறந்ததும் இல்லை.

Posted in கவிதைகள் | Comments Off on தேற்றி அருள்புரி.

துணை நில்

கடலா கியநின் கருணைக் கரையில்
களையா றிடுமோர் கணம்வாய்த் திடுமோ?
உடலா றிடுமோ? உயிரா றிடுமோ?
உணர்வூ றியவா ஒருவார்த் தையுரை! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on துணை நில்

உயிர்ப்பின் எழில்

சோடனைகள் விதவிதமாய்ச் சோடனைகள்
வகைவகையாய்ச்
சோடனைகள் என்றாலும் சோபிக்க வில்லைஏதும்!
சோடனைகள் அதனைத் தூக்கி நிறுத்தவில்லை!
ஏனென்றால் சோடிக்கப் பட்டதுவோ
உயிரற்ற Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உயிர்ப்பின் எழில்

விண்ணை உலுக்கும் வினாக்கள்.

இன்னுமின்னும் தோண்ட எத்தனை கூடுகள் வந்திடும்? -அவை
என்ன கொடிய கதைகளை ஊருக் குரைத்திடும்?
என்ன நடந்தது யாரிவர்கள் எனும் ஐயமும், – அட
என்னதான் மூடு மந்திர மென்கிற அச்சமும்,
இன்னும் அவிழாப் புதிராய்த் தொடருதே ஏனடா? -நிதம்
எண்ணிக்கை சொல்லிக் கடந்து நாம் போறமோ? கூறடா! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on விண்ணை உலுக்கும் வினாக்கள்.

சுப்பிரமணி

நடக்கத் தொடங்கையிலே யார்க்கும் இடைஞ்சலில்லை.
இடையில் இணைகையிலே எவரும்
தடுக்கவில்லை.
உடையோன் பின் வந்ததென்று
ஊர் முறையிட்டதில்லை.
நானே உரிமையாளன் எனயாரும் சொன்னதில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சுப்பிரமணி

காக்க முயன்றால்

கலையாத கனவோடு நனவின்று வாழும்.
கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம்.
விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம்
விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காக்க முயன்றால்

இதுவா நேர்வழி?

என்னதான் வசை? எங்கு பார்க்கிலும்
ஏனடா மனக் காழ்ப்புகள்?
ஏன் பொறாமைகள்? போட்டி பூசல்கள்
ஏன் பெருகுது தூற்றுதல்?
நின்று நன்மைகள் செய்பவர்க்குக் கை
நீட்டிக் குற்றம் சுமத்தலேன்? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இதுவா நேர்வழி?

காக்கும் இறை.

எதுவரும் பொழுதிலும், இடர்சுடும் நொடியிலும்,
இடிகளே வீழும் கணமும்.
“எவையுமே தாக்காது எனை”யென் றெனக்குளே
எழும் ஒரு அசரீரியும்.
சதிபல செய்யினும், தருமம் பிழைப்பினும்,
தவிர்த்து…மெய் தனை ஏய்பினும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காக்கும் இறை.

நெஞ்சோடு புலம்பல்.

ஏற்றிட முடியா இந்த
இழப்பினுக் கெதைநாம் செய்வோம்?
கூற்றுவன் கொடுமைக் காரன்…
குணநலம் குறைந்தோன்… கண்டோம்.
நேற்றிந்த நேரம் நின்றோன்…
“இன்றில்லை” என்ற உண்மை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நெஞ்சோடு புலம்பல்.

தீயவர் மாய்வர்.

மாய மந்திர ஜாலம் நிறைந்ததாய்,
மர்மப் பொய்கைகள் சுண்டி இழுப்பதாய்,
மாயைகள் புரி வல்லவர் சூழ்ச்சிகள்
வைத்து மயக்கி விழுத்தத் துடிப்பதாய்,
ஏய்த்து ஏமாற்றி ஆசைகள் காட்டிடும்
எழில்கொள் மோகினிப் பேய்கள் நிறைந்ததாய், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தீயவர் மாய்வர்.

காலத்தோடு ஓடுதல்.

காலமென்பது ஓடுகின்றது.
கால்களும் அதற் கேற்றவாறுதான்
பாலையோ அனற் பாதையோ…அதில்
பாய்ந்துமே பயணித்து உள்ளது.
கால்களில் அடி பட்டிருப்பினும்,
கால்கள் நொண்டவும், ஏதும் நோயினால் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலத்தோடு ஓடுதல்.

உளம் மாற வேண்டும்.

நல்லதிற்குக் காலமில்லை;
நல்ல முயற்சிக்கு,
நல்ல சிந்தனைக்கு,
நல்லதனைச் செய்வதற்கு,
நல்லாரைக் கூடி நடப்பதற்கு,
நாட்டிலுள்ள Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உளம் மாற வேண்டும்.

வேறென்ன வேண்டும்?

சோடனைகள் உச்சமெனத் தோன்றும்
பூஞ் சப்பறத்தில்
ஆரோகணித்து வந்தாள் அன்னை;
புடைசூழ்ந்து
அடியார்கள் கூட்டம் அலைமோத…
நாதவெள்ளம் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேறென்ன வேண்டும்?

பொய்கள் தோற்கும்

பொய்களைக் கண்டு பயந்து – அதைப்
புறஞ் சொல்லுவாரென் றதிர்ந்து.
நைந்து மனங்கள் நலிந்து – ஊரில்
நாலுபேரின் முன் குனிந்து
செய்வதறியாதிருந்து – வாழ்தல்
தீது; இதற்கு மருந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பொய்கள் தோற்கும்