தமிழ் வாகை சூடும்.

எங்கள் தமிழின் மகிமை; – அதன்
இனிமை, கனிவு, அருமை, பெருமை;
எங்கள் தமிழ் ஆழ நீளம்; – அதன்
இயல்பு, செழிப்பு, புதுமை புகுந்தும்
மங்காது பழமையும் காக்கும் – குணம்;
வரலாற்றுக் கேற்ப தனைமாற்றும் பண்பு;
இங்கிவை பற்றி உலகம் – நிதம்
எண்ணி வியக்கும். எமக்கேன் தயக்கம்?

உலகில் முதன்முதல் தோன்றி – வந்த
உன்னத மொழிகளில் தமிழ் மூத்ததென்று,
உலகில் இன்றும் இளமை குன்றா – தாளும்
உணர்வு மிகு மொழி தமிழே தானென்று,
உலகில் பல மூப்பு மொழிகள் – வடி
வொழுங்கு சிதைந்து வழக்கொழிந்தாலும்
உலகின் எண் திக்கும் பரந்து – இன்றும்
உயிர்ப்புடன் வாழும் மொழி… தமிழ்… வென்று!

யாரும் தமிழ்தன்னைக் காக்கத் – தேவை
இல்லை; அது தன்னைக் காத்து வளர்க்கும்.
ஊரின் உலகத்தின் மாற்றம் – யாவும்
உள்வாங்கித் தன்னைப் புதுப்பித் துயிர்க்கும்.
பேரைப் பெருமையை மீட்க – கவிப்
பெரியோர், அறிஞரை உருவாக்கி ஓங்கும்.
கூர்த்து இனும் கோடி ஆண்டு – இந்தக்
குவலயம் தன்னில் தமிழ் வாகை சூடும்!

Posted in கவிதைகள் | Comments Off on தமிழ் வாகை சூடும்.

எவரிருப்பார்?

விடிவொன்று வருமென்று மனமிருக்கும் – அது
விளைவென்ன தருமென்று இனமிருக்கும்.
முடியாதோ இடரென்று சனமிருக்கும் -யாரும்
முயலார்கள்; இழிவோடே நனவிருக்கும்.

அதிகாரம் எனும்போதை உருவெடுத்தே – இன்று
அநியாயம் புரிந்தாட தெரு… சிதைந்தே
சதியுற்று மிதிபட்டுத் தலைகுனிந்தே – எங்கள்
தலை, வாலும் தவிக்குது நிலை குலைந்தே!

‘குரலற்ற குரல்’ யாவும் குயில் நிகர்த்துக் – கூவி
குவலயச் செவிகளில் உரத்தொலித்து
மருமங்கள், புதிர், யாவும் அறுத்தெறிந்து – ஏதும்
வழி சொல்ல உதவாதோ… வரம் சொரிந்து?

எவர் வந்து எமதூரின் இடரழிப்பார்? -இன்றும்
எமர் வந்தார்; வரலாற்றைப் புதைத்தழிப்பார்.
கவிதைகள் தினம் பாடப் பலரிருப்பார் -நீளும்
கவலைகள் தமைத்தீர்க்க, எவரிருப்பார்?

Posted in கவிதைகள் | Comments Off on எவரிருப்பார்?

வாழ்வின் யதார்த்தம்.

அடுத்த கணமென்ன ஆகுமெனக்
கண்டறிய
முடியாத வாழ்வினிலே…
மோதி அடிபட்டு,
ஏதேதோ ஏக்கங்கள் தீர்க்கும்
அவா… குறையாப் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் யதார்த்தம்.

வலியது விதி

எப்படித்தான் எமைப்பாது காத்த போதும்
எமனிடத்தில் இருந்தெவரும் இலகு வாகத்
தப்பிவிட முடியாது; தருணம் வந்தால்
சரியாக நமைக்காத்தே நடந்த போதும்…
எப்படியோ ஏதோ ஓர் ரூபத் தோடே
எமன்வருவான்; பிடர்பிடித்துத் தள்ளிச் சாவு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வலியது விதி

கலிகாலம்

அன்பு, பாசம், எல்லா அயல் உயிர்களிலுமே
மென்மை மிகு நேசம்,
கருணை, ஜீவ காருண்யம்,
தீயவை சிந்திக்காச் சிந்தை,
பிறர்க்கேதும்
தீங்கு விளைவிக்காச் செயல்கள், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கலிகாலம்

காலமும் நேரமும்

காலம் உனக்குச் சாதகமாய் இருக்கையிலே…
காலத்தின் காற்றுந்தன்
பக்கம் அடிக்கையிலே…
காலத்திற் குன்னால் இலாபம் கிடைக்கையிலே…
காலத்திற் குன்னுடைய தேவை இருக்கையிலே…
இந்தக் கணம், அடுத்த கணம், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலமும் நேரமும்

வாழ்வின் கேள்விகள்

பாதை நூறு கண்களின் முன் விரிந்து உள்ளது. -அதில்
பயணம் எதால் போகவேணும்? மனம் மயங்குது.
மாதிரியாய் வாழ்ந்தவரை மனது தேடுது – சென்று
வாழ்வமோ? யாம் மாய்வமோ? யார் யாரைக் கேட்பது? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் கேள்விகள்

ஆகும் ஊழும் போகும் ஊழும்

கடந்துகொண் டிருக்கின்ற
ஒவ்வொரு கணங்களிலும்
நடக்கவேண்டிய தென்னென்று
நம்விதியோ… தலையெழுத்தோ…
காலமோ… நேரமோ…
கடவுளோ…வினைப்பயனோ… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆகும் ஊழும் போகும் ஊழும்

செய்…வா!

ஆயிரம் தடைகள் சூழ்ந்து
அடக்கிடும் போதும்…நூறு
ஆயிரம் இடர்கள் சீண்டி
அழித்திட முயலும் போதும்…
பாய்ந்ததை எதிர்க்கும் நெஞ்சும்,
பயப்படாக் கை, கால், கண்ணும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on செய்…வா!

இயற்கை நியதி

தெருவெலாம் துன்பம் திரளுது எனினும்
திசைகளிற் பூத்தன மலர்கள்.
தினந்தினம் வெய்யில் தீய்த்திடும் போதும்
செடிகளில் தோன்றின தளிர்கள்.
பெருமழை வெள்ளம் மூழ்கடித் தாலும்
பின் எழும் புதுப்புதுப் பயிர்கள். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நியதி

புறம்போல் அகமில்லை.

மனிதர்கள் மனிதர்களாய் இல்லை
இந்த நாட்களிலே!
மனிதர்கள், சராசரி
மனிதக் குணங்களுடன்
புறத்திலும் அகத்திலும்
புதிர்ப்போலி வேசங்கள் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புறம்போல் அகமில்லை.

இடர் மேலாண்மை

‘முன்னாயத் தம்’ என்று முறைக்கு முறைகதைத்து,
என்னென் றியற்கையிட- ரிருந்துதப்புவ தென்றாய்ந்து,
என்னென் றனர்த்தத்தைத் தணிப்பதெனத் திட்டமிட்டு,
என்னென் றிடர்க்குமுகம் கொடுப்பதெனக் கற்பித்து,
ஊரினைக் காப்பதற்கு ஒத்திகை களும்பார்த்து,
ஆயிரம் கதையளந்து, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இடர் மேலாண்மை

திக்(வா) விஜயம்

“அழிவு எங்கெங்கும் அழிவுகள்” என்றுதான்
அங்கும் இங்குமே செய்திகள் பேசின.
அழிவு, மரணங்கள் என்று அடிக்கடி
அன்று… போரிடை வந்திட்ட செய்திகள்
முழுதும் ஓய்ந்து அப்பப்போ அங்கங்கு
மோதல், விபத்து, வாள் வெட்டுகள்,போதையால் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on திக்(வா) விஜயம்

‘விலான கம’, ரம்புக்கணை.

உறங்கிக் கிடந்தது ஊர்;
நேற்று மட்டுமல்ல
பரம்பரை பரம்பரையாய் வசித்து
மகிழ்ந்துயிர்த்த
ஊரது;
நிம்மதியாய் உண்டு களித்துறங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘விலான கம’, ரம்புக்கணை.

பாடம்

இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது.
இயற்கையை அடக்க
எவராலும் இயலாது.
இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஏலாது.
இயற்கை ஏன் மாறுதென்று
எவரும் கேட்கலாகாது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்