எவரிருப்பார்?

விடிவொன்று வருமென்று மனமிருக்கும் – அது
விளைவென்ன தருமென்று இனமிருக்கும்.
முடியாதோ இடரென்று சனமிருக்கும் -யாரும்
முயலார்கள்; இழிவோடே நனவிருக்கும்.

அதிகாரம் எனும்போதை உருவெடுத்தே – இன்று
அநியாயம் புரிந்தாட தெரு… சிதைந்தே
சதியுற்று மிதிபட்டுத் தலைகுனிந்தே – எங்கள்
தலை, வாலும் தவிக்குது நிலை குலைந்தே!

‘குரலற்ற குரல்’ யாவும் குயில் நிகர்த்துக் – கூவி
குவலயச் செவிகளில் உரத்தொலித்து
மருமங்கள், புதிர், யாவும் அறுத்தெறிந்து – ஏதும்
வழி சொல்ல உதவாதோ… வரம் சொரிந்து?

எவர் வந்து எமதூரின் இடரழிப்பார்? -இன்றும்
எமர் வந்தார்; வரலாற்றைப் புதைத்தழிப்பார்.
கவிதைகள் தினம் பாடப் பலரிருப்பார் -நீளும்
கவலைகள் தமைத்தீர்க்க, எவரிருப்பார்?

Posted in கவிதைகள் | Comments Off on எவரிருப்பார்?

வாழ்வின் யதார்த்தம்.

அடுத்த கணமென்ன ஆகுமெனக்
கண்டறிய
முடியாத வாழ்வினிலே…
மோதி அடிபட்டு,
ஏதேதோ ஏக்கங்கள் தீர்க்கும்
அவா… குறையாப்
போதையுடன் போராடிப் புதிராய்த் திரிகின்றோம்!
தூர திருஷ்டியினால்
தொலைவில் இருப்பதையே
தேற முடியாதோர்…
தேடுகிறோம் கற்பனையில்
பொன்னும் பொருளும் புதையலும்
அதிசயமாய்
மின்னும் நம் கையிலென்றும்
வேட்கையுடன் அலைகின்றோம்.
அடுத்த கணம் மூச்சுத் திணறியே
மயங்கிவீழ்தல்
நடந்திடலாம் என்னும் யதார்த்தத்தை
யாம் ஏற்கோம்.
முடியும் முடியுமென
முக்கி முயலுகிறோம்.
முடியும் எனுஞ் சொல்லுள்
முடிவும் இருந்திடலாம்…
அறியோம்;
கொஞ்சம் அறிவு, பலம், செல்வம்,
வரமாகப் பெற்றுவிட்டால்…
‘அது’ எமது ஆற்றலினால்
வந்ததென எண்ணியே
வானுக்கும் மண்ணுக்கும்
பந்தாய்க் குதித்துப் படுத்திடுவோம்.
“ஊரே எம்
காலடிக்குக் கீழ்” என்போம்.
“கடவுளென்ன கடவு”ளென்போம்.
காலம், விதி, தர்மம், கறுமமெல்லாம் பொய்யென்போம்.
ஆகும் எலாமும் எம் மாலே
எனப்பொங்கி
ஆட முயன்று, அடிபட்டு,
எழும்பேலாது
ஓய்வோம்;
சிலசமயம் ஒரேயடியாய் உயிர்விடுவோம்!
‘அற்பம்தான் வாழ்வு’
அதையுணர்ந்தும் – உணராதும்
‘அற்புதம்
யாம் செய்வம்’ என்று
ஆணவம் மமதையுடன்
நிற்பதுதான் எங்கள் நிலை;
‘அயல் – யதார்த்தம்’
கற்றுத் தெளியாது…கனாக்கண்டு…
நனவினையும்
முற்றாய் இரசிக்காது…
வைப்போம் நாம்
நமக்கு உலை!

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் யதார்த்தம்.

வலியது விதி

எப்படித்தான் எமைப்பாது காத்த போதும்
எமனிடத்தில் இருந்தெவரும் இலகு வாகத்
தப்பிவிட முடியாது; தருணம் வந்தால்
சரியாக நமைக்காத்தே நடந்த போதும்…
எப்படியோ ஏதோ ஓர் ரூபத் தோடே
எமன்வருவான்; பிடர்பிடித்துத் தள்ளிச் சாவு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வலியது விதி

கலிகாலம்

அன்பு, பாசம், எல்லா அயல் உயிர்களிலுமே
மென்மை மிகு நேசம்,
கருணை, ஜீவ காருண்யம்,
தீயவை சிந்திக்காச் சிந்தை,
பிறர்க்கேதும்
தீங்கு விளைவிக்காச் செயல்கள், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கலிகாலம்

காலமும் நேரமும்

காலம் உனக்குச் சாதகமாய் இருக்கையிலே…
காலத்தின் காற்றுந்தன்
பக்கம் அடிக்கையிலே…
காலத்திற் குன்னால் இலாபம் கிடைக்கையிலே…
காலத்திற் குன்னுடைய தேவை இருக்கையிலே…
இந்தக் கணம், அடுத்த கணம், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலமும் நேரமும்

வாழ்வின் கேள்விகள்

பாதை நூறு கண்களின் முன் விரிந்து உள்ளது. -அதில்
பயணம் எதால் போகவேணும்? மனம் மயங்குது.
மாதிரியாய் வாழ்ந்தவரை மனது தேடுது – சென்று
வாழ்வமோ? யாம் மாய்வமோ? யார் யாரைக் கேட்பது? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் கேள்விகள்

ஆகும் ஊழும் போகும் ஊழும்

கடந்துகொண் டிருக்கின்ற
ஒவ்வொரு கணங்களிலும்
நடக்கவேண்டிய தென்னென்று
நம்விதியோ… தலையெழுத்தோ…
காலமோ… நேரமோ…
கடவுளோ…வினைப்பயனோ… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆகும் ஊழும் போகும் ஊழும்

செய்…வா!

ஆயிரம் தடைகள் சூழ்ந்து
அடக்கிடும் போதும்…நூறு
ஆயிரம் இடர்கள் சீண்டி
அழித்திட முயலும் போதும்…
பாய்ந்ததை எதிர்க்கும் நெஞ்சும்,
பயப்படாக் கை, கால், கண்ணும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on செய்…வா!

இயற்கை நியதி

தெருவெலாம் துன்பம் திரளுது எனினும்
திசைகளிற் பூத்தன மலர்கள்.
தினந்தினம் வெய்யில் தீய்த்திடும் போதும்
செடிகளில் தோன்றின தளிர்கள்.
பெருமழை வெள்ளம் மூழ்கடித் தாலும்
பின் எழும் புதுப்புதுப் பயிர்கள். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நியதி

புறம்போல் அகமில்லை.

மனிதர்கள் மனிதர்களாய் இல்லை
இந்த நாட்களிலே!
மனிதர்கள், சராசரி
மனிதக் குணங்களுடன்
புறத்திலும் அகத்திலும்
புதிர்ப்போலி வேசங்கள் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புறம்போல் அகமில்லை.

இடர் மேலாண்மை

‘முன்னாயத் தம்’ என்று முறைக்கு முறைகதைத்து,
என்னென் றியற்கையிட- ரிருந்துதப்புவ தென்றாய்ந்து,
என்னென் றனர்த்தத்தைத் தணிப்பதெனத் திட்டமிட்டு,
என்னென் றிடர்க்குமுகம் கொடுப்பதெனக் கற்பித்து,
ஊரினைக் காப்பதற்கு ஒத்திகை களும்பார்த்து,
ஆயிரம் கதையளந்து, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இடர் மேலாண்மை

திக்(வா) விஜயம்

“அழிவு எங்கெங்கும் அழிவுகள்” என்றுதான்
அங்கும் இங்குமே செய்திகள் பேசின.
அழிவு, மரணங்கள் என்று அடிக்கடி
அன்று… போரிடை வந்திட்ட செய்திகள்
முழுதும் ஓய்ந்து அப்பப்போ அங்கங்கு
மோதல், விபத்து, வாள் வெட்டுகள்,போதையால் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on திக்(வா) விஜயம்

‘விலான கம’, ரம்புக்கணை.

உறங்கிக் கிடந்தது ஊர்;
நேற்று மட்டுமல்ல
பரம்பரை பரம்பரையாய் வசித்து
மகிழ்ந்துயிர்த்த
ஊரது;
நிம்மதியாய் உண்டு களித்துறங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘விலான கம’, ரம்புக்கணை.

பாடம்

இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது.
இயற்கையை அடக்க
எவராலும் இயலாது.
இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஏலாது.
இயற்கை ஏன் மாறுதென்று
எவரும் கேட்கலாகாது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

காலக் குருதி

காலமோ நிற்காமல் கணம்கணமும் தொடர்ந்து
ஓடிக்கொண் டிருக்கும் உயிர்க்குருதி!
எப்படித்தான்
குருதி உடலுள் சுழன்றோட
உயிர்துடித்து
இருக்குமோ…அப்படி இக்காலக் குருதி ஓட… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலக் குருதி