ஈற்றில் என்ன ஆகும்?

மூண்டுஎழும் மோதல்களில்
மூச்சிழந்து யாரெவர்…மண்
மூடி, எரிந்தே, இறந்து போனார்?-யார் தாம்
முக்கி உசிரூசலாட வீழ்ந்தார்?

மக்கள் செறிவாகவுள்ள
மாநகர்க் குடிமனைமேல்
வந்து விழும் ஏவுகணை நூறு- எவர்
மாய்ந்தழிந்தார் கூறுவது யாரு?

இலட்ச இலட்ச மாக மக்கள்
இருக்குமிடம் மீது பல
இலட்சம் குண்டு வீசுவதா தர்மம்? – அழி-
விறப்பில் எவர் காண்கிறார்கள் கர்வம்?

ஈவிரக்க அற்று… கணை
ஏவித், திசையை நொருக்கி,
இரத்த ஆறு ஓடவைக்கும் போரை- செய்து
என்ன கண்டார்? சாய்ப்பது ஏன் வேரை?

யாவரென்ன ஆனாலென்ன?
யாம் எடுத்து வைத்த காலை
யாம் திரும்ப வைக்கமாட்டோம் என்று – யுத்த
யாகம் செய்வார்; மானுடத்தைக் கொன்று.

ஆணவம், மமதையதும்,
ஆக்கிரமிப்புச் சிந்தனையும்,
ஆசை இலாபமும், வளம் பறிக்கும் -எண்ணம்
அதுவும், ஆள…யாரை தின்னும் இன்னும்?

மாறி மாறி ஏவுகிற
மாய ஏவு குண்டுகளால்
மானிடரும் மானிடமும் மாழும் – யார்தான்
வாகை சூடி…ஈற்றில் என்ன ஆகும்?

பாட்டாளியும் கூட்டாளியும்
பாடுபட்டுச் சேர்த்த பொருள்
வேட்டால்…சுடு காட்டுச் சாம்பல் ஆக – என்ன
வெற்றி கண்டார்… யாவருமே சாக?

Posted in கவிதைகள் | Comments Off on ஈற்றில் என்ன ஆகும்?

வெற்றிடம் தானோ விளையும்?

வானம் தொடும்படி மண்ணில் வளர் நகர்
மாயும்; சுடுகாடாய் மாறும் – மக்கள்
மறைவர்; இடுகாடு சூழும். -இந்த
ஈனம் தொடர்ந்திடும்…ஏவு கணைகள்
இன்றை வரலாற்றை மாற்றும் – இப்போ
எமனுக்குத் தானே கொண் டாட்டம்!

எத்தனை நாட்களாய்க் கட்டி வளர்த்திட்ட
எல்லாம்… தகர்ந்தது தூளாய் – அங்கங்-
கிருந்தோர் தொலைந்தரோ பாழாய்? – இந்த
‘யுத்த சன்னத்தர்கள்’ வீம்புக்கு ஆயிரம்
யுத்திகளோ டெழும் போதாய் – எங்கும்
ஊழி பொசுக்குது தீயாய்.

வேடர் களாய்த் தலைவர்கள் வெறிகொண்டு
வேட்டைகள் ஆட நிலங்கள் – சிதை
மேடுகள் ஆச்சு; தலங்கள், – நகர்,
வீடு,வயல்கள், வனங்கள், எரிந்தன.
வெந்து கருகும் இனங்கள். – இதை
வேடிக்கை பார்க்கும், மதங்கள்.

சீறிச் சிதைக்கிற ஏவு கணைகட்கு
‘சின்னன் பெரிதா’ தெரியும்? – ஏழை
செல்வனென்றா பார்த்தறியும்? – அவை
வேறு படுத்தாது வேர்முதல் ‘மானுட
விருட்சத்தையே’ பேர்த்தெறியும் – எங்கும்
வெற்றிடம் தானோ விளையும்?

ஆற்றல் வளர்ந்தது, அறிவு வளர்ந்தது,
அன்பு வளரலை ஏனோ? -யாரும்
ஆணவம் கொண்டதாற் தானோ? – “கல்வி
ஏற்றம் தரும்” என்றோம்; இன்று அழிவையே
எங்கும் விதைத்திட லாமோ? – அறம்
இற்றததன் பணி… வீணோ?

‘மானுட நேசம்’, ‘ மனிதத்தின் மாண்புகள்’,
‘வாழும் உரிமைகள்’, என்று – “யுத்தம்
வந்திடக் கூடாது…சென்று – தேய
வேணும்” என்றே… அமைதிக்கு முயன்றவர்
வெற்றுக் கடதாசி ஆனார் – யுத்தம்
விரியவே ஊமையாய்ப் போனார்.

‘உலக அமைதி’, நல் ‘உண்மைச் சமாதானம்’,
உயிர்களைக் காத்திடும் பண்பு, -தோற்று
ஒளியுதா? வாடுது அன்பு! – இந்தக்
கலகத்திடை கோடிக் கோடிக் கணக்கானோர்
கலங்கித் துடிப்பது கண்டு – எந்தக்
கடவுளும் காக்கலை வந்து!

“பாடி முடிக்க முடியாது” வையகம்
பட்டிடும் இன்றைய பாட்டை – வாய்
பார்க்கவா கூடும் இக் கேட்டை? – பலி
ஆடுகளாய்ப் புவி மாதரை மாற்றி
அரசியல் செய்வோரின் சேட்டை – தீர்க்க
ஆரிடம் உள்ளது சாட்டை?

Posted in கவிதைகள் | Comments Off on வெற்றிடம் தானோ விளையும்?

மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

பூமியைப் பொத்தல் போட்டன குண்டுகள்.
போய் ‘அடிமுடி’ தேடின வேட்டுகள்.
பாதாள லோகத் துள்ளே…பதுங்கிய
பலரையும் தேடித் தின்றது ஏவு கணை.
பாடு பட்டவர், பகலிர வாகத் தம்
பணம் உழைப்பில் செழித்த பெருங்குடி, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

நரகமாகும் நகர்கள்.

எங்கும் அழிவுகள்.
எங்கெங்கும் சிதைவுகள்.
எங்கும் புகைமூட்டம்.
எங்கெங்கும் தீப்பரவல்.
இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகப்…
பொங்கி வெடித்துப் பொசுக்கிடுது போர்க்கணைகள். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நரகமாகும் நகர்கள்.

நடு நிலைமை

வாழ்க்கையெனும் பட்டத்தின் வாலினையும்
அதை ஏற்றும்
நூலினையும் அறுத்துவிட்டு
நோண்டுது ‘நிகழ்காலம்’.
என்செய்யும் வாழ்க்கைப் பட்டம்?
இடர்க்காற்றில், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நடு நிலைமை

தமிழ் வாகை சூடும்.

எங்கள் தமிழின் மகிமை; – அதன்
இனிமை, கனிவு, அருமை, பெருமை;
எங்கள் தமிழ் ஆழ நீளம்; – அதன்
இயல்பு, செழிப்பு, புதுமை புகுந்தும்
மங்காது பழமையும் காக்கும் – குணம்;
வரலாற்றுக் கேற்ப தனைமாற்றும் பண்பு; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தமிழ் வாகை சூடும்.

எவரிருப்பார்?

விடிவொன்று வருமென்று மனமிருக்கும் – அது
விளைவென்ன தருமென்று இனமிருக்கும்.
முடியாதோ இடரென்று சனமிருக்கும் -யாரும்
முயலார்கள்; இழிவோடே நனவிருக்கும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எவரிருப்பார்?

வாழ்வின் யதார்த்தம்.

அடுத்த கணமென்ன ஆகுமெனக்
கண்டறிய
முடியாத வாழ்வினிலே…
மோதி அடிபட்டு,
ஏதேதோ ஏக்கங்கள் தீர்க்கும்
அவா… குறையாப் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் யதார்த்தம்.

வலியது விதி

எப்படித்தான் எமைப்பாது காத்த போதும்
எமனிடத்தில் இருந்தெவரும் இலகு வாகத்
தப்பிவிட முடியாது; தருணம் வந்தால்
சரியாக நமைக்காத்தே நடந்த போதும்…
எப்படியோ ஏதோ ஓர் ரூபத் தோடே
எமன்வருவான்; பிடர்பிடித்துத் தள்ளிச் சாவு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வலியது விதி

கலிகாலம்

அன்பு, பாசம், எல்லா அயல் உயிர்களிலுமே
மென்மை மிகு நேசம்,
கருணை, ஜீவ காருண்யம்,
தீயவை சிந்திக்காச் சிந்தை,
பிறர்க்கேதும்
தீங்கு விளைவிக்காச் செயல்கள், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கலிகாலம்

காலமும் நேரமும்

காலம் உனக்குச் சாதகமாய் இருக்கையிலே…
காலத்தின் காற்றுந்தன்
பக்கம் அடிக்கையிலே…
காலத்திற் குன்னால் இலாபம் கிடைக்கையிலே…
காலத்திற் குன்னுடைய தேவை இருக்கையிலே…
இந்தக் கணம், அடுத்த கணம், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலமும் நேரமும்

வாழ்வின் கேள்விகள்

பாதை நூறு கண்களின் முன் விரிந்து உள்ளது. -அதில்
பயணம் எதால் போகவேணும்? மனம் மயங்குது.
மாதிரியாய் வாழ்ந்தவரை மனது தேடுது – சென்று
வாழ்வமோ? யாம் மாய்வமோ? யார் யாரைக் கேட்பது? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் கேள்விகள்

ஆகும் ஊழும் போகும் ஊழும்

கடந்துகொண் டிருக்கின்ற
ஒவ்வொரு கணங்களிலும்
நடக்கவேண்டிய தென்னென்று
நம்விதியோ… தலையெழுத்தோ…
காலமோ… நேரமோ…
கடவுளோ…வினைப்பயனோ… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆகும் ஊழும் போகும் ஊழும்

செய்…வா!

ஆயிரம் தடைகள் சூழ்ந்து
அடக்கிடும் போதும்…நூறு
ஆயிரம் இடர்கள் சீண்டி
அழித்திட முயலும் போதும்…
பாய்ந்ததை எதிர்க்கும் நெஞ்சும்,
பயப்படாக் கை, கால், கண்ணும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on செய்…வா!

இயற்கை நியதி

தெருவெலாம் துன்பம் திரளுது எனினும்
திசைகளிற் பூத்தன மலர்கள்.
தினந்தினம் வெய்யில் தீய்த்திடும் போதும்
செடிகளில் தோன்றின தளிர்கள்.
பெருமழை வெள்ளம் மூழ்கடித் தாலும்
பின் எழும் புதுப்புதுப் பயிர்கள். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நியதி