Author Archives: Webadmin

நிஜவெற்றி

வேலை கிடைத்ததென்று வேகப் புயலானாய். வேலை கிடைத்ததென்று வெட்டிப் பிடுங்குகிறாய். வேலைக்கு நூறு சதவீத விசுவாசம் கூட்டிப் பெருக்கிக் குத்தி முறிகின்றாய்.

Posted in கவிதைகள் | Leave a comment

செய்நன்றி

  எப்போதோ ஓர்நாள் என்றோ ஒருதடவை என்னுடைய உணவின் உண்ணத் தகுந்ததெல்லாம் உண்டு….உண்ண முடியாத மீதிகளை “உண்ணட்டும்” என்று

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றும் சுடும் சொல்

ஒவ்வொரு சொற்களுக்கும் ஒவ்வொரு அர்த்தமுண்டு. ஒவ்வொரு சொற்களுக்கும் ஒவ்வொரு பொருட்களுண்டு. “ஒருசொல் உடலென்றால்” உயிர்அதன் பொருளென்பேன்.

Posted in நிகழ்வுகள் | Leave a comment

தந்தை ஈகம்

“இரத்தத்தை பாலாக்கி ஊட்டினாளாம் நம் அன்னை…” பெரிய விடயம் தான். ஈகத்தின் உச்சம் தான். என்றாலும் தந்தை என்றொருவர் அங்கில்லை  என்றிருந்தால் ….இரத்தம் 

Posted in கவிதைகள் | Leave a comment

நாயகன்

  வெளித்தோற்றம் ‘நாயகன்.’ உள்ளேயோ நீ ‘வில்லன்.’ ஆழகான நண்பன். அகத்தில் முதற்பகைவன். பேரில் பெரியோன். பெருமையில் மிகஇழிந்தோன். ஊரில் உயர்ந்தோன். உளத்தில் மிகத்தாழ்ந்தோன். “உன்பிழைக்கு ஆதரவாய் உரைக்கவில்லை அன்று ஏதும், உன்தவறைத் தண்டித்தார் உதவவில்லை அன்று நானும்” என்பதற்காய் உள்ளே கறுவிக், குரோதவிசம் கொண்டபடி, வெளியே குளிரச் சிரித்தபடி, என்னை இழிவுசெய்ய எண்ணி, சபையேறிச், … Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கடந்து போன கவிதை ஊழியன்

‘பால்வீதி’ வரையும் பயணித்த பாவலவன். ‘சுட்டு விரலாலே’ சொர்க்கத்தை தொட்டுவந்தோன். ‘நேயர் விருப்பத்தில்’ நிஜ நியாயம் பேசியவன்.

Posted in கவிதைகள் | Leave a comment

அதே தினம்

  மீண்டும் அதேதினம்போல் பெருகிற்றுச் சனவெள்ளம். மீண்டும் அதேதினம்போல் எழுந்தது அவலஓலம். மீண்டும் அதேதினம்போல் வெடித்தன கதறல்கள். மீண்டும் அதேதினம்போல் விளைந்தன அடிபிடிகள்.

Posted in கவிதைகள் | Leave a comment

தேடல்

  நட்டாற்றில் நின்ற நாலுலட்சம் பேரினோலம் எட்டவில்லை தோட்டா வேலிகளைக் கடந்தெங்கும். கண்டுமே காணாத கனவான் களும்…நேரே கண்டுமே கண்மூடிக்

Posted in கவிதைகள் | Leave a comment

திசைகளைத் தகர்த்தல்

  திசைகள் அவை எட்டும் சிதறிக் கிடந்ததிங்கு. திசைகள் ஒருஎட்டும் தெளிவாய் விரிந்ததிங்கு. இங்கேநான் நிற்கின்றேன்… என்தலைமேல் எண்திசையும்

Posted in கவிதைகள் | Leave a comment

நம்பிக்கை நிழல்

  எங்கேதான் போவதென இலக்கற்ற ஓர்இலவம் பஞ்சாய் அலைந்தபடி முடியாப் பயணத்தில் ஒவ்வொரு திசையுமோர் விபச்சாரி போலழைக்க எவ்வாறு மீண்டேன் என அறியா தெனைக்காத்து இங்கின்று நிற்கின்றேன்! எப்படிநான் இங்குவந்தேன்? என்மூளை சொன்னபடி, என்னிதயம் சொன்னபடி, என்னுணர்வு சொன்னபடி, என்னுள்ளே கேட்கின்ற அந்த அசரீரி அழைத்தபடி, வந்தேனா? என்னென்று இங்குவந்தேன்? எப்படி இந்நிலையடைந்தேன்? என்னென்று வந்ததடை … Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காணாமல் ஆக்கப் பட்டவர்கள்

காலப் பனிக்கட்டி உருகிக் கரைந்து…கண் ணீராய்ப் பரவி குடியிருந்த நிலங்களினை மூழ்கடிக்க… குடும்பச் சுமைமுதுகில் கட்டியதால் மீட்க முடியாமல்

Posted in கவிதைகள் | Leave a comment

பணிப்பெண்

(இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக சென்ற 12 பெண்களின் சடலங்கள் சவூதி அரேபிய பிணவறைகளில் —அண்மைய செய்தி) தேட்டம் உனதுழைப்பால் திரளும்எனக் காத்திருப்பர் வீட்டின் தலைவர் விளையாடும் பிள்ளைகள், வாழ்வை நகர்த்த

Posted in கவிதைகள் | Leave a comment

உழவுப் போர்.

நீரற்று வாடும் நிஜப்பயிர்க ளாய்… நீவிர் தார்வீதி வெயிலில் தளிர்போல் வதங்குகிறீர்! வரண்டு இலையுதிர்த்த மரங்களென உடைகளைந்தீர்! வெறுங் கோவணம் பூண்டீர் வரங்கேட்டுத் தவஞ்செய்தீர்! எலிகளும் பாம்புகளும் எத்தனையோ படிமேலாய்… இறந்தபின் நிம்மதியாய் இருக்க இறந்தஅவை கௌவிக்… கிடைக்காத நிம்மதி நியாயத்தை எவ்வாறேனும் பெறவே பசிப்போர் புரிகின்றீர்! பொறுக்க முடியாமல் பொத்திவைத்த மானத்தைத் துறந்துங்கள்… வாழ்வின் … Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அனல் வெயில்

சாதுவான பிராணிபோலத் தான் வெய்யில் இருந்ததன்று! வீட்டுநாய் போல வாலைக் குழைத்துவந்து ஈரமென்றும் வெக்கையென்றும் இல்லாது

Posted in கவிதைகள் | Leave a comment

தமிழுடன் வாழ்தல்

சென்ற நாட்களைக் கணக்கில் எடுக்கையில் செந்தமிழ்ச் சுவை பற்றி நினையாத, வென்ற நம் தமிழ்க் கவிதை பயிலாத, வேறு வேறு புதுமை புகுத்தியே நன்றெனக் கவி செய்து மகிழாத, நாளெலாம் பயனென்றுமே இல்லாது சென்ற நாட்கள்தான் என்பேன்: தமிழனாய்ச் சிறந்திடாத நாள் வீண்நாள் உரைக்கிறேன்.

Posted in கவிதைகள் | Leave a comment