Author Archives: Webadmin

ருசி

பச்சை மலையின் ருசியைப் பகர்கிறது பொச்சடித்து நானும் சுவைத்த சுடுதேனீர்! கடலின் ருசிதன்னைக் காட்டி மணக்கிறது சுடச்சுடச் சொதிபொரிய லுடனிணைந்த மீன்குழம்பு!

Posted in கவிதைகள் | Leave a comment

ஞான நல்லூர்

ஞானநதி இயல்பாய்ச் சுரக்கும் மடி. பாணன் யாழ் மீட்டிப் பெற்ற நகரின் தலைமைஊர். யாழ்ப்பாணத் தமிழின், சைவத்தின், பண்பாட்டின்,

Posted in கவிதைகள் | Leave a comment

பிரியாவிடைக் காவியம் (நெடுங் கவிதை)

(30.10.1995 நிகழ்ந்த வரலாறு காணாத ‘வலிகாம இடம்பெயர்வைத்’ தொடர்ந்து இடம்பெயர்ந்து பளையில் இருந்தபோது 02.01.1996 அன்று எழுதியது) அம்மா தமிழ்த்தாயே! அகிலத்தின் எழிலரசி! பம்மாத்தால் அன்றிப் படைப்பலத்தால் ஆண்டவளே! முச்சங்கம் கண்டும். மூப்புநரை காணாது தற்சமயம் கூட தளிர்த்தொளிரும் நித்திலமே!

Posted in கவிதைகள் | Leave a comment

மயான மனசு

ஒவ்வொரு மனிதருள்ளும் ஒருகோடி ஆசைகள்! ஓவ்வொரு மனதினுள்ளும் பலகோடி ஏக்கங்கள்! ஆசைகள் திரண்டு காற்றாய் அடித்தலைக்க, ஏக்கங்கள் சேர்ந்து சூறைகளாய் விரட்டப், போகும் சருகுகளாய்

Posted in கவிதைகள் | Leave a comment

கடவுளா காசு?

காசே கடவுளென்று நேற்றக் கணம்மட்டும் போற்றிப் புகழ்ந்தீர்! அது வெறும் கடதாசிக் குப்பையென அதனின் ‘பெறுமதி உயிர்ப்புதனை’

Posted in கவிதைகள் | Leave a comment

காணாமல் போன கனவு

‘தமிழ்மாறன்’ அவனின் தவப்பெயர். பெயர்க்கேற்ப ‘தமிழ்-மாறன்’ தானவனாம்… தமிழ்நிலத்தைக் காதலித்தோன். அமிழ்தை விடஇனியன்.

Posted in கவிதைகள் | Leave a comment

அழுக்கு

அழுக்கை மிதித்தது செருப்பு… நீரூற்றிக் கழுவினேன்: புதிதைப்போல் கலக்கிற்று அது! நேற்று அழுக்காச்சு உடுப்பு… அலம்பித் துவைத்துவிட அழுக்கறுத்து வெண்மை பளீரிட்டது அது! இன்று அழுக்காச்சு உடம்பு… அருவருப்பை மறந்துநன்றாய் முழுகிக் குளித்தேன்: முழுதும் புனிதமாச்சு! அழுக்காகும் மனது அனுதினமும்… என்செய்து அழுக்கறுத்து தூயதாக்கு வேனோ? அறியாது அழுக்கேறி… வழிதேடி… அலைகிறது என்மனது!

Posted in கவிதைகள் | Leave a comment

முற்றுப் புள்ளிகள்?

அமைதிக் கதைக்குவைக்கப் பட்ட குருதிதோய்ந்த இரு ‘முற்றுப் புள்ளிகளா’ நீங்கள்? பொதுவாக ஒரு ‘முற்றுப் புள்ளி’ முடிவு: நும்மரணம்

Posted in கவிதைகள் | Leave a comment

பாவம்

“மந்திரச் செபத்தாலே மாறிவிடும் இல்லையெனில் அந்த உயிரிறைவன் அடியினையே சென்றுசேரும். எந்த மருத்துவமும் இதைத்தடுக்க முடியாது.

Posted in கவிதைகள் | Leave a comment

பிறவி

கடலில் விழுகிறது மழையின் துளியிலொன்று! கடலோடு ஒப்பிடையில் மழைத்துளி மிகச்சிறிது! கடலில் அதுவிழுந்தால் கடலினிலே மாற்றமேது? கடலின் அளவில், சுவையில், அதன் நிறத்தில்,

Posted in கவிதைகள் | Leave a comment

போய்க் கொண்டிருக்கின்றோம்

போய்க் கொண்டிருக்கின்றோம்: போகும் திசையறியாது போய்க் கொண்டிருக்கின்றோம்: மனவழியில் கால்போகப் போய்க் கொண்டிருக்கின்றோம்: வாழ்வில் எப் பிடிப்புமற்றுப் போய்க் கொண்டிருக்கின்றோம்:

Posted in கவிதைகள் | Leave a comment

பேனா முகில்

உன்னுடைய பேனா ஒருமழை முகில்போலாம்! அந்த முகில்கரைந்து அள்ளிப் பொழிந்தமழை– போலப் பெருகி வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடிற்று உன்எழுத்து!

Posted in கவிதைகள் | Leave a comment

திசைபூக்க அன்பு சொரிவாள்

தேவாதி தேவரும் பூமாரி தூவிடச் சிங்கத்தில் ஏறி வருவாள்! தீமைகள் யாவையும் தீயவர் வாழ்வையும் தேடியே நின்று சுடுவாள்! பாதாதி கேசமும் பொன்மின்ன பார்வையில் பரிவையும் காட்டி எழுவாள்!

Posted in கவிதைகள் | Leave a comment

சந்நதியெம் சந்ததிக்கு காவல்

அன்புகனிந்துன் பதியை வந்து அணைந்தேன். –இன்று ‘அன்னதானக் கந்தனே’ உன்வீதி உருண்டேன்! சந்நதியெம் சந்ததிக்கு காவல் உணர்ந்தேன். –உந்தன் தாள்நிழலே ஞானமடி என்று தெளிந்தேன்!

Posted in கவிதைகள் | Leave a comment

நியாயப் படுத்தல்கள்

நியாயப் படுத்தல்கள் முடிவுகளாய் மாறாது. நியாயப் படுத்தல்கள் இறுதித் தீர்வாகாது. நானென் ‘சரி’ உரைக்க நியாயப் படுத்துகிறேன். நானென் ‘பிழை’மறைக்க நியாயப் படுத்துகிறேன்.

Posted in கவிதைகள் | Leave a comment