Category Archives: கவிதைகள்

கவிப் புகழ்

காலனை வென்றவன் யாரெனக் கேட்டிடில்… “கவிஞனே” என்றிடும் ஊரு. கற்பனைக்குள் பல அற்புதம், அதிசயம் காட்டிடும் அவன் திறம் பாரு. சீலமும் ஞானமும் செம்மையும் கொண்டவன் சிந்தையில் ஊறிடும் ஊற்று…

Posted in கவிதைகள் | Comments Off on கவிப் புகழ்

காத்திருப்பு

“மீட்பர் பலபேர் விரைந்து வருவார்கள். காலத்தை மாற்றுகிற களவீரர் படைவரிசை புடைசூழ எழுவார்கள். பொழுதை நிஜமாக விடியவைக்கும் யுகபுருஷர்

Posted in கவிதைகள் | Comments Off on காத்திருப்பு

கனவு காண(ன)ல்

என்னென்ன கனாக்கள் இனிமேல் பலித்திடுமோ? என்னென்ன கனவுகள் இனி நனவாய் மாறிடுமோ? எந்தெந்தக் கனாக்கள் இடையில் கலைந்திடுமோ?

Posted in கவிதைகள் | Comments Off on கனவு காண(ன)ல்

நாயகன்

தீயவர்கள் சேர்ந்து நின்று தீமைசெய்யும் போதிலும், தேடியே துயர் விதைக்கத் திட்டந்தீட்டும் போதிலும், வாயினால் பழிப்புரைத்து மாயவைக்கும் போதிலும், வஞ்சகங்களால் தடைகள் காலிலிட்ட போதிலும், நீ நிமிர்ந்து நின்று கொண்டு நீதி நியாயம் கேட்கிறாய்.

Posted in கவிதைகள் | Comments Off on நாயகன்

தடம்

என்னுடைய காற்தடங்கள் எனது வழியெங்கும் விரவிக் கிடக்கிறது. அது மண் ஒழுங்கையிலும், ஊர்த் தார் வீதியிலும், சீமெந்துத் தரையினிலும்,

Posted in கவிதைகள் | Comments Off on தடம்

கனாக்கள்

கோடி கோடி கனாக்கள் எழும் விழும். கோடியில் சில தானே பலித்திடும். கோடி கோடி கனவில் அனேகமாய் குலைந்து கலைந்து பலதும் மறைந்திடும். ஆழ்ந்த துயிலில் அலைக்கும் கனாக்களில் அதிகம் அர்த்தங்கள் அற்றே சிதறிடும்.

Posted in கவிதைகள் | Comments Off on கனாக்கள்

கஞ்சிக் காதை

தோட்டாவும் குண்டும் துளைக்கக் ‘கடைசியாக’ கேட்பார்கள் அற்றே இனம் கிழிந்த – நாட்களிலே கெஞ்சித் துவண்ட பசிவயிற்றைக் காத்தது..இக் ‘கஞ்சி’ அதைமறவா தே! ஊர்கள் ஒருகரையில் ஓய்ந்தொதுங்க, நாலுலட்சம்

Posted in கவிதைகள் | Comments Off on கஞ்சிக் காதை

வெல்வோம்

வாழ்வு வருமென்று வாசல் தனில் நாளும் வாடி, வழிபார்த்து உள்ளோம் -மன வாட்டம் தனில் மாரி ஊற்றும் அமுதென்று வானம் தனைப்பார்த்துக் கொள்வோம் -நிதம் சூழும் இடர் வீழும், சோதனைகள் தீரும் சொர்க்கம் வரும் நம்புகின்றோம்-தொடர்

Posted in கவிதைகள் | Comments Off on வெல்வோம்

தேர்ப்பவனி

வாழ்வென்னும் தேரோ… மனமென்னும் சாமியுடன்… ஆசைகள் வடம்பிடித்து அனுதினமும் இழுத்திருக்க ஓடிக்கொண் டிருக்கிறது! ஊரில் அதுபோகும் பாதையிலே பாதித் தொலைவு

Posted in கவிதைகள் | Comments Off on தேர்ப்பவனி

நன்றி

என் ‘நா’ வயலைச் சாறி இழுத்துழுது அன்று ‘நீ’ நட்ட அருள்விதைகள் கடகடென்று இன்று முளைத்தெழுந்து ‘இம்’ மென்னும் முன்னாலே…

Posted in கவிதைகள் | Comments Off on நன்றி

மஞ்சட் கருக் கதிர்

எந்த வகைக்கோழி இட்டு அடைகாத்து வந்து பொரிக்குமுன்னர் வீணாய் உடைந்த ‘முட்டை- மஞ்சட் கரு’ வானில் மினுங்கிடுது சூரியனாய்?

Posted in கவிதைகள் | Comments Off on மஞ்சட் கருக் கதிர்

விதி?

என்னதான் தேசம் என்னதான் நீதி என்ன ஊர் போகிற போக்கு? எங்குபோய்ச் சேரும் எங்களின் வாழ்வு? இல்லை நாளை பற்றி நோக்கு. புன்னகை சாகும் போலிகள் சூழும் பொய்களைக் காத்திடும் ‘வாக்கு’.

Posted in கவிதைகள் | Comments Off on விதி?

சிறகு

முகிற் சிறகு அடித்துப் பறக்க முயலும் வான். புகைச் சிறகு அடித்துப் பொங்கி எழும் நெருப்பு. ஒளிச் சிறகு அடித்து ஊர்கிறது பகல்; கோடி குளிர்ச்சிறகு அடித்துக்

Posted in கவிதைகள் | Comments Off on சிறகு

பிழை சாடி எழுவோம் யாம்.

வாசலில் நின்று வறுமை துணிந்து வரவேற்பு பாடுது இன்று. வரும்படி கெட்டு கடன் உடன் பட்டு வாழ்வு தேய்ந்திழியுது சென்று. காசில்லை என்று கஜானா வரண்டு காலியாய் ஆனதால் மன்று

Posted in கவிதைகள் | Comments Off on பிழை சாடி எழுவோம் யாம்.

நிம்மதி வரச் சம்மதி.

நிம்மதி வரச் சம்மதி உனை நீண்ட நாட்களாய்த் தேடினேன். நேரிலே உனைக் காணவே நிதம் நெஞ்சினால் வரம் கேட்கிறேன். சம்மதித்து நீ வந்ததில்லை…ஏன் தான் என அறியாதுளேன்.

Posted in கவிதைகள் | Comments Off on நிம்மதி வரச் சம்மதி.