Category Archives: கவிதைகள்

பிழை சாடி எழுவோம் யாம்.

வாசலில் நின்று வறுமை துணிந்து வரவேற்பு பாடுது இன்று. வரும்படி கெட்டு கடன் உடன் பட்டு வாழ்வு தேய்ந்திழியுது சென்று. காசில்லை என்று கஜானா வரண்டு காலியாய் ஆனதால் மன்று

Posted in கவிதைகள் | Comments Off on பிழை சாடி எழுவோம் யாம்.

நிம்மதி வரச் சம்மதி.

நிம்மதி வரச் சம்மதி உனை நீண்ட நாட்களாய்த் தேடினேன். நேரிலே உனைக் காணவே நிதம் நெஞ்சினால் வரம் கேட்கிறேன். சம்மதித்து நீ வந்ததில்லை…ஏன் தான் என அறியாதுளேன்.

Posted in கவிதைகள் | Comments Off on நிம்மதி வரச் சம்மதி.

முயல்வு

எட்டிய என் எல்லையில் இருந்து அடுத்த எல்லைக்கு எட்டி நடக்கின்றேன்! இயங்குகிற என் காலும், உள்ளமும், இதயமும், உடலினது ஒத்துழைப்பும்,

Posted in கவிதைகள் | Comments Off on முயல்வு

தமிழ்க்கவி

“கடவுளைக் காணலாம் கவிதையில்” என ஒரு கவி…இவன் பறைவதை அறிக. கனவையும் நனவையும் கண்டுரை செய்வதே கவிதையின் தொழில் இதைப் புரிக. விடயங் களுக்குள் வியப்புப் பலகண்டு விளக்கிடும் ‘நொடி’..கவி தெரிக.

Posted in கவிதைகள் | Comments Off on தமிழ்க்கவி

நாயகன்

தீயவர்கள் சேர்ந்து நின்று தீமை செய்யும் போதிலும் தேடியே துயர் விதைக்கத் திட்டம் தீட்டும் போதிலும் வாயினால் பழிப்புரைத்து மாயவைக்கும் போதிலும் வஞ்சகங்களால் தடைகள் காலிலிட்ட போதிலும் நீ நிமிர்ந்து நின்று கொண்டு நீதி நியாயம் கேட்கிறாய். நெஞ்சுரம் குறைந்திடாது நேர்மையோடு ஆர்க்கிறாய்.

Posted in கவிதைகள் | Comments Off on நாயகன்

கோடைத் தகிப்பு

தாரும் உருகிடுது. தாவரங்கள் கருகிடுது. வேரும் பதறிடுது. விலங்கெல்லாம் வாடிடுது. நீர்…ஆவியாக நெடுங்குளங்கள் வற்றிடுது.

Posted in கவிதைகள் | Comments Off on கோடைத் தகிப்பு

கோடை

நெருப்பள்ளிக் கொட்டுது நெடும்பகல். தீப்பிடித்து எரிகிறது திசைகள். ‘எரிபற்று நிலை’ கடந்து பொசுங்கிய காற்று பொடியாய்ப் புழுதியாய்

Posted in கவிதைகள் | Comments Off on கோடை

பிரகடனம்

நெஞ்சில் நேர்மையும், வாயிலே உண்மையும், நீதியின் வழி சென்றிடும் கால்களும், அஞ்சிடாது தவறைத் திருத்திடும் ஆற்றலும், பணம் காசு பதவியில் கொஞ்சமும் பற்றற்ற குணமும்…நம் கோவில் குளம் பழ மரபில் நம்பிக்கையும்,

Posted in கவிதைகள் | Comments Off on பிரகடனம்

கனவு காண(ன)ல்

என்னென்ன கனாக்கள் இனிமேற் பலித்திடுமோ? என்னென்ன கனவுகள் இனி நனவாய் மாறிடுமோ? எந்தெந்தக் கனாக்கள் இடையில் கலைந்திடுமோ? எந்தெந்தக் கனவுகளை

Posted in கவிதைகள் | Comments Off on கனவு காண(ன)ல்

வசந்தம்

வலையெறிந்து போகிறது வசந்தம்! இளங்காற்று தலைகுளப்பி மேனியிலே தடவும் சுகந்தத்தை! சந்தனத் தென்றல் வருடிச் சுகம்கேட்கும்! மந்திரஞ் சொல் அலைகள்

Posted in கவிதைகள் | Comments Off on வசந்தம்

பங்கம் துடைப்பேன்

சொற்கள் நதியாய்ச் சுரந்துகொண்டே இருக்க, கற்பனை ஆழம் அகலம் காணாக் கடலாய் விரிந்த படி பெருக, விந்தைப் பொருள்வகையோ

Posted in கவிதைகள் | Comments Off on பங்கம் துடைப்பேன்

அறிவோன்

இறைவன் அறிவான் எவன் பொய்யன் என்பதனை. இறைவன் அறிவான் எவன் மெய்யன் என்பதனை. இறைவன் அறிவான் எவன் அழுக்கன் என்பதனை. இறைவன் அறிவான் எவன் தூயன் என்பதனை. இறைவன் அறிவான் எவன் நண்பன் என்பதனை. இறைவன் அறிவான் எவன் பகைவன் என்பதனை.

Posted in கவிதைகள் | Comments Off on அறிவோன்

என் கவி(வி)தைகள்.

காலனைக் கண்டு நடுங்கிடும் -கதை கவிஞன் எனக்கென்றும் இல்லையே-அவன் ஓலம் இட்டோடித் தொலைந்திட -எந்தன் ஊற்றுக் கவிதை உதவுமே -புது வேல்களாய்ப் பாயும் வரிகள்முன்-எந்த வில்லங்கம் துன்பந்தான் நிற்குமே?-உடல்

Posted in கவிதைகள் | Comments Off on என் கவி(வி)தைகள்.

காவல்

தேரடியில் தேடி எமைச் சீண்டுகிற காற்றும் தீர்த்தம் தரும் கேணியதன் தேனமுத ஊற்றும் கோபுரம் நிமிர்ந்துகலங் கரை யெனவே ஆளும் கூட்டி வரும்…’திக்குத் தெரியாத வரை’ நாளும் ஆறு நிலைப் பூசை மணி ஓசை வரவேற்கும்

Posted in கவிதைகள் | Comments Off on காவல்

நாயகன்

தீயவர்கள் சேர்ந்து நின்று தீமை செய்யும் போதிலும் தேடியே துயர் விதைக்கத் திட்டம் தீட்டும் போதிலும் வாயினால் பழிப்புரைத்து மாயவைக்கும் போதிலும் வஞ்சகங்களால் தடைகள் காலிலிட்ட போதிலும் நீ நிமிர்ந்து நின்று கொண்டு நீதி நியாயம் கேட்கிறாய். நெஞ்சுரம் குறைந்திடாது நேர்மையோடு ஆர்க்கிறாய்.

Posted in கவிதைகள் | Comments Off on நாயகன்